Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, February 13, 2017

நம்மில் மூன்று விதமான மனிதர்களா?

நம்மில் மூன்று விதமான மனிதர்களா?ஆம்.
 நம்மை சுற்றி மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர்...
நமக்குள் தோன்றும் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் ..அது என்ன மூன்று விதம் என்பதை நாம் இப்பொழுது பார்ப்போம்....
சமீபமாக நான் இதனை தெரிந்து கொண்டேன்.இந்த செய்தி மிக அற்புதமாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் தெரிந்து கொண்டதை ஒரு பதிவாக மாற்றியுள்ளேன்...
இதனை ஒரு சிறிய உதாரணத்தோடு நாம் பார்ப்போம்...
மூன்று வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வோம்...

                                                   
மூன்று பொருள்கள்....களிமண் பொம்மை,ஸ்பான்ச்,சர்க்கரை பொம்மை.






  • முதலில் நாம் களிமண் பொம்மையை தண்ணீரில் போடுவோம்...என்ன ஆகும்...


களிமண் கரையும்...இது என்ன புதுசா கேட்கிறீங்க,,என நினைக்கலாம்..
தண்ணீர் என்ன ஆகும்?

இப்பொழுது அந்த தண்ணீர் அழுக்காக மாறி இருக்கும்...
மேலும் இதனை மீண்டும் உபயோகமும் செய்ய முடியாது..
 அது போலவே சிலர் அவர்கள் பாழாவதோடு  நம்முடன் சேர்ந்து நம்மையும் பாழ்படுத்தி விடுகிறார்கள்...
தீய பழக்கம் அவர்களிடம் உள்ளதென்றால் அதனை மற்றவர்களையும் செய்ய வைத்து தீய பழக்கம் என தெரிந்தே அதற்கு அடிமையாக ஆக்கி விடுவார்கள்...

  • இரண்டாவது  வாளியில் ஸ்பான்ச் எடுத்து போட்ட என்ன ஆகும்?
இதுவும் நமக்கு தெரிந்தது தான்...தண்ணீரைமுழுவதுமாக இழுத்துக்கொள்ளும்..அதுபோல தாங்க...சில பேர்...நம்மை அவுங்க பக்கம் இழுத்து இல்லையென்றால் அவர்கள் நம்மிடம் எல்லா வேலைகளையும் வாங்கிக்கொள்கிறார்கள்...நம்மிடம் உள்ளதை உறிஞ்சி விடுகிறார்கள்...ஆகையால் நாம் இப்படிப்பட்டவரிடம் பார்த்து கவனமாக  இருக்கலாம்.
        
  • இப்பொழுது மூன்றாவது வாளியில் சர்க்கரை பொம்மையை போடுங்க....என்ன ஆகும்...                                                                                                                                      
சர்க்கரை கரைஞ்சுடும்..ஆமாம்..தன்னை கரைத்துக் கொண்டு தண்ணீரையும்  இனிப்பாக மாற்றிவிடும்...அது போல தான் சில பேர்.நம்மிடம் பழகி நமக்காக  உயிரே விடுவாங்க...அவர்களும் கஷ்டபட நேரிடும்,,அதற்காகவும் தயங்காமல் நம் வெற்றிக்கு வித்திடும் உண்மையான மனிதர்களோடு பழகி நம் வாழ்வையும் மேம்படுத்தி அவர்களையும் மேம்படுத்தி இனிமையாக சந்தோஷமாய் வாழ்வோம்.
                        நன்றி,,,அன்பு நல்வாழ்த்துகள்...சுபதினம்