Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, June 23, 2020

யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 4)

இந்த புத்தகமும் அருமையானது... ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி உள்ளதை வைத்து புரிய புதுமையாக ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள உதவுகிறது! நான்காம் பகுதியை பார்ப்போம் வாங்க!


ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன வாக்கியம் தான் இது! எவ்வளவு நல்லது ... அப்பப்போ  அந்த குழந்தை தன்மையோடு இருந்தாலே ஆனந்தம் தானே!  ஏனென்றால் குழந்தைக்கு வெறுப்பு என்பது இருக்காது...வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அந்த அந்த நேரத்தை கையாளும் பாங்கு அவர்கள் போல யாருமில்லையே!😊👍

ஒரு சின்ன பையனுக்கு ஏற்பட்ட தவறான புரிதலில் ஒரு நல்ல ஆசியரை இழந்தோம், இதற்கு காரணம் ஒவ்வொருவரிடம் உள்ள நன்மையான விஷயத்தை நாம் பிள்ளைகளுக்கு சொல்லாதது தான் என சொல்வேன்...எல்லா விஷயத்திலும் + - இருக்கும்..ஆனால் எதனால் படிக்க சொல்கிறார்கள் யாருக்கு நன்மை என்பதை புரிந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது. இனிமேலும் இது நடக்காமல் இருப்பது  நம் கையில் தான் உள்ளது....சரியாக வழிக்காட்டுவோம் சிறுவர்களுக்கு...தவறை மன்னிப்போம் அப்போது அவர்கள் மற்றவரின் தவறை மன்னிப்பார்கள்...🙏👍


பாசி போன்றது வெறுப்பு.. தரையில் பாசி இருந்தால் அதனை சுத்தமாக்குவது தான் நாம் நடக்க வழி சுமுகமாகும் இல்லையென்றால் ப்ரச்சனை (வழுக்கிவிட்டால்) தான்! மனதை இது போல வெறுப்பு என்னும் பெருநெருப்பு இல்லாதவாறு வைத்து கொண்டால் நல்லது. இல்லையென்றால் வெறுப்பால் பகை வளரும் அதனால் நமக்கு நிச்சயம் நிம்மதி வரணும் என்றால் வெறுப்பு என்னும் மகத்தான பாசியை அகற்றுவோம்!😊👌👍




யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 3)


இந்த புத்தகம் ரொம்ப அருமையாக 
நம்மை சுற்றி இருப்பதை கொண்டு புரிய வைத்து இருக்காங்க...
வாங்க மூன்றாவது பகுதி என்ன சொல்கிறது பார்ப்போம்!😊👍

தலைப்பிலே புரிந்து இருக்கும்...சும்மா..சும்மான்னு சொல்வோம் ஆனால் ஏதோ விஷயம் இருக்கும்...ஆனால் எதையும் பற்றி கவலையில்லாமல் சும்மா இருப்பது சுகம் தானே! நடைமுறையில் சாத்தியமா!? யோசிப்போம்...

யோகா செய்வது மிகவும் எளிது..அதை செய்வதற்கு முன்பு அமைதியாய் வாயை மூடி உட்கார சொல்வாங்க! நிச்சயமா வாய் தான் மூடும் ஆனால் மனசு அப்போ தான் அமெரிக்காவிற்கே போயிட்டு வந்திடும்...பயிற்சி செய்ய அந்த மனமும் அமைதி பெறும்...அது தான் அங்க சிறப்பு அம்சமே! மௌன விரதம் என்பதை பற்றி ரொம்ப அருமையாக சொல்லி இருந்தாங்க...நாம் இருந்துகிட்டே இல்லாத மாதிரி இருப்பது தான்...எந்த ஒரு  செயலிலும் ஈடுபடாமல் இருப்பது  தான் அந்த விரதத்தில் சிறப்பு.ஆனால் அப்போ தான் அபிநயம் காட்டுவது..தாளில் எழுதுவது என சிலர் செய்வர்..மௌனத்திற்கு பிறகு வார்த்தைகள் மிகவும் அழகாக இருக்கின்றன என்பதை நாமும் புரிந்து கொள்ள முடியும்..😊👍

உண்மையில் "சும்மா இரு" என்றால்  மனதுள்ளும் நாம் வார்த்தைகள் இன்றி  இருப்பது...இதோ இந்த தரையை போல... ஏனென்றால் கழுவி காயப்போட்ட தரை மாதிரி வெறிச்சோடி இருக்க வேண்டும்..எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பது என்பது ஒரு சுகம் தானே!
அருமை👌👍😊

யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 2)


இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதியை பார்ப்போம் வாங்க! அருமையாக தான் வாழந்த சூழ்நிலையை எழுத்தாளர் 
கண் முன்னே நிறுத்தினார்...
பதற்றம் தணியும் வரை பேசவே கூடாது என்ற கட்டுபாடும், நேற்று  என்னை காப்பாற்றிய சுவாமி இன்றைக்கு என்னை காப்பாற்ற மாட்டாரா என்ன? என்ற கேள்வியை கேட்கிறார். 😊👍

பதற்றம் உடலையும் உள்ளத்தையும் அவதானிக்கும்...பதற்றம் நல்லதல்ல...அது உள்ளே நுழைந்தால் எல்லாம் பாழாயிடும்...கவனம் வேண்டும்..பதற்றம் ஆகாமல் அமைதி காப்போம்!😊
வரண்ட நிலத்தில் விதை விழுந்தாலும்  மழை வரும் வரை காத்து அந்த தண்ணீரை உள்ளீழுத்து சிறிய முளைவிட்டு பின் அது வானத்தை எட்டும் மரமாகி மீண்டும் மழை வரக் காரணமாகிறது.. அது போல பக்தர்களுக்கு கஷ்டம் வரும் ... 
பொறுமையாக காத்திருந்து அவன் அருளை பெற்று மெல்ல முன்னேறி பின் பலர் வாழ்வை வளப்படுத்துகிறான்....🌱🌴🌳🌧️☔

 பதற்றம் கொள்ளும் மனசு இரப்பர் பாண்ட் (Rubber Band)போல தான்..ஒன்று அதுவே சுருங்கி கீழே தெறித்து விழும்...அல்லது இழுப்பவர் கையில் பட்டு " டப் " என்று  அடித்து வலி ஏற்ப்படுத்துகிறது. 
அருமையான உதாரணம் இல்ல! 
நேற்று Teapot ...இன்று Rubber Band..😊👍



S- Stretching
T- Transferable
R- Remarkable
E - Exuburent
T - Together
C- Curiosity
H- Happy

என்னுடைய தேடலில் கிடைத்தவை
                                                     - தொடர்ந்து தெரிந்து கொள்வோம்





யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 1)


இந்த புத்தகம் படிக்க இன்னைக்கு தொடங்குகிறோம்.... வாங்க!பார்ப்போம்...எழுத்தாளர்பாரதி பாஸ்கர் அவர்கள் என்றாலும் மேடையில் பேசுவது போல உணர முடிகிறது 
அவரின் வரிகளில்....🤝😊
முதலிலே புத்தகத் தலைப்பு தான் தலைப்பு... சிறகை விரி ! பற என்று சொன்னால் எவ்வளவு அழகாய் இருக்கும் ...யோசித்தாலே அருமை...மனக்கண்ணில் பறக்க தோன்றுகிறது...நம்மை சுற்றியிருப்பவர் அனைவருமே நமக்கு குரு தான்....என்று கூறிய  ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமி பற்றி அறிய முடிந்தது...அருமையான வரிகள் ஒவ்வொருவரும் நமக்கு ஏதோ சொல்லி கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்...😊👍

 படைத்தல் - ப்ரம்மா, காத்தல் - விஷ்ணு, அழித்தல் - சிவன் என்ற இம்மூவரும் ஒன்று சேர்ந்த அவதாரம் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமி...🙏

https://www.vikatan.com/spiritual/temples/93103-history-of-gnanaguru-dattatreya-and-hows-got-24-teachers
Click here

மூவரும் சேர்ந்தவர் ஞானகுருவிற்கு 
24 குருமார்கள் 
யார் யார் என அறிய முடிகிறது...
மன வலிமை,மன அமைதி உண்டாக,
தீவினை அகல ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமியை வணங்குவர்🙏

https://tamil.boldsky.com/insync/pulse/dattatreya-jayanti-2020-date-significance-timings-028342.html
Click here

நான் தேடிய அதிக தகவலில் இந்த குழந்தை வரமும்,வரலாறு,
கதை  என அறிய முடிந்தது...மேலே அதிக தகவலுக்காக நீங்களும் இதில் சென்று அறிய இங்கே கொடுத்துள்ளேன்...🙏


தேநீர் குடுவையில் ஏற்கனவே நிரம்பி இருந்தால் மேல் அதிகமாக ஊற்ற இயலாதது போல...எந்த கருத்தும் உள்ளே செல்லாது நம் மனம் நிரம்பி வழிந்தால்...முடிந்த வரை அப்பப்போ சுத்தம் செய்து  அதிக அதிக பாடங்களை கற்போம்! 
வாழ்வில் முன்னேறி செல்வோம்! 
நமக்கு  நம்மை சுற்றிருக்கும் குரு எல்லாம் என்ன சொல்கிறார் என கேட்க தயாராகுவோம்! நன்றி🙏😊
                                                                - தொடர்ந்து தெரிந்து கொள்வோம்...






புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 13)

இந்த புத்தகம் உண்மையில் ஆசிரியர் சொல்வது போல ஒரே  கருத்தை யோசிப்பது நல்ல மாற்றம் தரும்..வாங்க 12 ஆவது தலைப்பு என்ன சொல்கிறது பார்ப்போம்!

ஆமாம்...செய்வதற்கு முன்பு பல முறை யோசிக்கலாம்... ஆர்வமிருக்கா? திறமையோடு செய்து முடிக்க நம்மால் முடியுமா? யோசித்துவிட்டு முடிவு செய்த பிறகு,செய்ய ஆரம்பிக்கணும் இல்லை என்றால் கம்முன்னு இருக்க வேண்டியது தான் உத்தமம்... செய்தால் perfect ஆக செய்யணும் அப்பறம் பின்வாங்க கூடாது...  அது எந்த விஷயமாக இருந்தாலும் என்பதே என் புரிதல், அனுபவம் கூட சொல்லலாம்..செய்தால் சரியா செய்யணும் இல்லை என்றால் முடியாது நேரடியாக சொல்லிவிடுவேன்... யோசித்து சொல்கிறேன் என்பது எதிர்ப்பார்த்து காத்திருப்பவரின் ஏமாற்றமாக மாறும் என்பதால் தான்! கோச்சிப்பாங்க என்று யோசித்தால் கடைசியில் நேரமின்மை, சிக்கல்,பதற்றம்... மனஸ்தாபம்..இப்படி பல வந்து வரிசைக்கட்டி நிற்குமே?!...சரிதானே...🤪😊👍

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 12)


இந்த புத்த்கம்  தான் படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு  12 ஆவது தலைப்பு என்ன என்பதை பார்ப்போம் வாங்க!👍😊
நம்முடைய புரிதல் எப்படியோ அப்படியே...புண்ணிய பாவங்களை பொசுக்கும் இறைமை முன்னாடி நிற்கவே தயங்கணும்... 
நம்மால் ஒரு நாலு பேரைக் கூட சமாளிக்க முடியல ...
ஆனால் உலகம் பூராவும் மட்டுமல்ல அண்ட சராசரங்களையும் கட்டி ஆள்பவன் அல்லவோ! எவ்வளவு சமாளிக்கணும்...           
(நான் நினைத்து கொள்வேன் ...அது தான் நடனமாடி relax ஆகிறார்..)


 ஆடிய பாதமே அம்பலவானரே...சிதம்பரத்தில் வாழும் சிவகாமி நேசரே....  ஆலால சுந்தரம்... அற்புத சுந்தரம்... கல்யாண சுந்தரம்... கடம்பவன சுந்தரம்....என் அப்பன் அல்லவா! என் தாயும் அல்லவா.... பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா! என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது....🙏😊😃
                                                                                      - தொடர்ந்து யோசிப்போம்





புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 11)


இந்த  புத்தகத்தை தான் படித்து யோசித்து கொண்டிருக்கிறோம்... 11 ஆவது  தலைப்பு என்ன சொல்கிறது பார்ப்போம்...வாங்க!

சின்ன பதிவு ஆனால் மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்றாகும்👍
மனத்தூய்மை...Purity in Mind gives peaceful in life..





திருக்குறள் வழி நாம் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யலாம்...
நம் மனதை நாம் நெறிப்படுத்தினால் 
நிச்சயம் உயர்வு தான்...
தூய்மையாக வைப்பது கடினம் என்றாலும் 
முடிந்த அளவில் முயற்சி செய்யலாமே!😊👍
                                                                              - தொடர்ந்து யோசிப்போம்

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் Full Book Review

வெற்றிகரமாக இந்த புத்தகத்தை 
நிறைவு செய்தாச்சு!😊👍🙏.   
 🙏அன்பே தெய்வம்! அறிவே தெய்வம்! 
ஆனந்தமே தெய்வம்....  
பண்பே தெய்வம்! பணிவே தெய்வம்!
பணியே நம் தெய்வம்! 
நற்பணியே நம் தெய்வம்!🙏
என்ற இந்த பாடல் தான் ஞாபகம் வருகிறது....   

இந்த புத்தகம் படிக்கும் போது தான் பல சோதனைகளை கடக்க வேண்டி இருந்தது என்று கூடச் சொல்லலாம்....😡😊👍

  Control  கோபம் என்று சட்டென்று ஞாபகம் வந்தது....கோபம் வரவில்லை என்று சொல்வதை விட கோபத்தை வெல்ல சில சந்தர்பங்களில் அதனை வெல்லக்கூடிய வழிமுறைகளை பின்பற்ற முடிந்தது என்பதே இப்புத்தகத்தின் வெற்றி!🤝😊🙏

 எழுத்தாளர் திலகவதி ஐபிஎஸ்அவர்களுக்கு மிக்க நன்றி...சரியான வழிகாட்டியாக நடைமுறையில் உள்ள பல விளக்கங்கள் கொடுத்து புரிய வைத்துள்ளீர்கள்...

கோபத்தின் வீர்யம் எவ்வளவு ? அதனால் வரும் ஆபத்தை தடுக்க வழி அன்பால் மட்டுமே சாத்தியம்!இன்னும் பல tips கொடுத்து உதவியுள்ளீர்கள்....மீண்டும் மிக்க நன்றி!

உங்களோட கருத்தையும் கீழே தெரிவித்து விட்டு செல்லுங்கள்....சரியா...நன்றி..அன்பு நல்வாழ்த்துக்கள்....சுபதினம்!

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் (Chapter 9)


இந்த புத்தகத்தின் கடைசி Chapter   தான் இன்னைக்கு பார்க்கலாம் வாங்க! முடிகின்ற தருணத்தில் அருமையாக பலவற்றை மேற்க்கோள் காட்டியுள்ளார் எழுத்தாளர்...🤝 

 நட்பில் பொறாமையாக மாறும் போது இழப்பு😡 
மேலும் கோபம் ஒரு பசி அடங்காத தீ 🔥 போல தான்...
நான் அதற்கு அடிமை இல்லை அடிமையாகவும் கூடாது...
ஒரு போதும் தோற்கக்கூடாது... நிச்சயம் கடைப்பிடிப்போம்😊👍


அருமையாக தலைப்பு... விலை மதிப்பில்லாதது எப்படி? கோபம் நம்மை யாராவது குறை கூறினாலோ அவர்கள் நம்மை சொல்ல தகுதி உள்ளதா என நாம் யோசிப்போம்... 
பின்பு சிந்திப்போம்...அவரிடம் நாம் கோபப்பட வேண்டுமா.... 
கோபம் நம்மை தாழ்த்தும்...ஒரு போதும் நன்மையல்ல...
நாம் நம் சொந்தபந்தம்...
நட்பு என அனைத்தும் இழக்கிறோம்..
அப்போது கோபம் என்பது விலை மதிப்பில்லாதது 
ஆகிறது தானே!😡😊👍
கோபத்தில் ஓர் அறையில் சென்று என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று சொன்னால்....
கத்துவது ....குத்துவது....போட்டு உடைப்பது....என எல்லாம் செய்தவுடன் மனம் திருப்தி அடையலாம்...
ஆகையால் உடலிலும் மாற்றம் ஏற்படுகிறது என ஒரு ஆய்வில் சொல்லியுள்ளனர்... 
எனினும் நம்மால் பொறுமை காக்க இயலும் ...
பொறுமை கடலினும் பெரியது என்பதே தவறு...
பொறுமைக்கு எல்லையில்லை.... 
பொறுத்து பொறுத்து உடலை பாதிக்காதவாறு 
கோபத்தை தவிர்ப்பதே மேல்!
 நாம் கோபப்படாமல் இருக்கலாம் சரி...👍 
எதிர் இருப்பவர் கோபப்பட்டால் 
நாம் கடைப்பிடிக்க வேண்டியது தான் பொறுமை!
கஷ்டம் தான்...ஆனால் சமாளிப்போம்... 
எவ்வளவோ பார்த்திட்டோம் இது என்ன ஜுஜுபின்னு கோபத்தை எதிர் கொள்ள விழிப்புணர்வோடு கையாளவும்!
கோபத்தை ஆங்கிலத்தில் 
Anger என்போம்...அதில் ஒரே ஒரு எழுத்தை முதலில் சேர்த்தால் Danger என்ற ஆபத்தாய் மாறி விடுகிறது...
அதனால் கோபம் என்ற உணர்வை அன்பின் வசத்தால் நிச்சயம் வெல்ல இயலும்...முயற்சி செய்வோம்... 😊👍🙏

இனி நாம் கோபம் வரும் போது தவிர்ந்திடுவோம்!
இப்புத்தகம் படித்த பயனை பெறுவோம்!
Control கோபம் என மனதினுள் சொல்லிக்கொள்வோம்!
மிக்க நன்றி 👍

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் (Chapter 8)


இந்த புத்தகம் தான் படித்துக் கொண்டிருக்கிறோம்...எட்டாவது Chapter ல் என்ன சொல்றாங்க பார்ப்போம்...கோபத்தை கையாள பொறுமையும் அவசியம் என்று புரிய வருகிறது..😊👍

அனைவருக்குமே  இருக்கக்கூடிய மூன்று குணங்கள்...                     
  😊ஸத்வ குணம் ( அமைதி, தூய்மை)           
 😀ரஜோ குணம் (பெருமிதம்,ஆசை)       
 😡 தமோ குணம் ( குழப்பம்,பழி வாங்குதல்)
 இம்மூன்றில் மோசமான தமோ குணம் இயற்க்கையில் இருந்தாலும் அதனை வெல்ல வேண்டியது மனோபலம் தான்!பலர் கோபப்பட்டு நிறைய இழந்ததை பார்த்தும் கேட்டும் நாம் ஏன் இன்னும் அதனை சுதாரித்து நடந்து கொள்ளக்கூடாது? யோசிப்போம்!
நிறைய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவர்
திரு ஐசக் நியூட்டன் அவர்கள்,
ஒரு முறை அவரின் 20 வருட உழைப்பை அவரின் நாய் அங்கும் இங்கும் சுற்றி விளையாடி மெழுகுவர்த்தி சாய்ந்து 
அனைத்தும் தீ 🔥 க்கு இரையாகின...
வெளியே சென்று திரும்ப வந்தவர் நாயை தடவி கொடுத்தாராம்....
சாம்பலுக்கு இரையானது தன்னுடைய தவறும் அடங்கியுள்ளது...
நாய்க்கு என்ன தெரியும் என்ற யோசனையில் 
கோபத்தை அடக்கி பொறுமை காத்தார்...
அது போல் எதிர் இருப்பவரின் மனநிலையை யோசிக்க வேண்டும்...
குழந்தை தண்ணீர் கொட்டிவிட்டால் அல்லது ஏதேதோ காரணங்களுக்கு அடிப்பது,
திட்டுவது என நாம் செய்வதை யோசிப்போம்...
நம் உடல்நிலையும் அடங்கியுள்ளது...🤔👍
எதிர் இருப்பவர் கோபத்தோடு பேசினாலும்
 நாம் இனிமையாக பேசுவோம்...
நான்கு விரலும் தன்னை பற்றி சொன்னது தான் 
இங்கே ஞாபகம் வருகிறது...
நான்  பெரியவன் என நடுவிரல்  கூறியதாம்...
நான் சுட்டிகாட்டுவேன்...
நான் விலையுயர்ந்த பொருளை அணிகிறேன்...
நான் மிக சிறயவனாக இருந்தாலும் முன்னால் உள்ளேன்..
இப்படி கூறியதாம் ஒவ்வொரு விரலும் 
அங்கே கட்டை விரல் வந்து நான் இல்லை என்றால் 
நீங்கள் எவரும் இயங்க முடியாது 
ஆகையால் அவரவர் கர்வம் கொள்ள வேண்டாம் என்றதாம்...
அனைவரையும் சார்ந்து தான் உள்ளோம் ...
ஒருவர் இல்லை என்றாலும் கஷ்டம் தான்...
ஆனால் நான் இல்லை என்றால் இயங்கவுதே கஷ்டம் என்றவுடன் புரிந்து கொண்டதாம் மற்ற விரல்கள்....
அன்பாக இருப்பது தான்
 அந்த கட்டைவிரலுக்கு சமானமாக கொள்ளலாம்!      
அன்பால்  வெல்வோம்! அமைதியை அடைவோம்! 😊👍

                      - தொடர்ந்து வாசிப்போம் கோபத்தை கட்டுப்படுத்துவோம்...









புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் (Chapter 7)


ரொம்ப ரொம்ப அருமையான ஒரு Chapterஎன்று  சொல்லலாம் இந்த ஏழாவது Chapterஐ...மிக அருமையான எட்டு விதமான புரிதலோடு நிறைய எடுத்துகாட்டுகள் கொடுத்திருந்தாங்க எழுத்தாளர்... அருமை..நிச்சயம் கோபம் வரக்கூடாது என்பதில் சரியான வழிக்காட்டுதல்... 👉😡👎👉💗💓👈😊🤝👍😀☺️
தலைப்பில் ஒரு திக் திக்...வியாதியா கோபம்...ஆமாம் ஆனால் இல்லை.....கோபத்தை தொடர்ந்து வர வைத்தால்...Bp..Ulcer...asthma....எல்லாம் வரிசை கட்டி நிற்குமாம்...
அத வரவிடாம இருந்தால் ஆரோக்கியமாய் இருக்கலாம்.. 
அதற்கு நாமும் கொஞ்சம் முயற்சி செய்யணுமே!👍செய்வோமா?🤔

 பொதுவாக பெண்கள் கோபம் வந்தால் அதிகமாக சாப்பிடுவாங்க...! திட்டுவாங்க!..அவ்வளவு தான்...😡😏😟🙁😌😊

 ஆனால் ஒரு ஆண் கோபப்பட்டா...அதிகமாக சாப்பிடுவது மட்டுமல்ல வெறியாகிடுமாம்..பழிவாங்க துடிக்குமாம்..வெறுத்தும் விடுவர்....தவறான பழக்கத்திற்கும் அடிமையாகிடுவார்களாம்! ஆகையால் நிம்மதியாய் வாழணும்....வாழவும் விடணும்...கோபம் அவ்வளவு ஆபத்தை விளைவிக்குமாம்...😡👉🤥🥶

 பேசினால் பல பிரச்சனைகள் தீரும்....ஆகையால் நான் ஏன் சமாதானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமில்லாமல் நம் வாழ்க்கையில் நிம்மதியாய் வாழ பேசினாலே தீரும் ப்ரச்சனையை பேச மறுப்பது அறமா?யோசிப்போம்!

 குழந்தை கோபமாக  இருந்தால் நிச்சயம் உடனே சமாதானம் செய்யணும்... கோபத்தை தேக்கி வைக்க கூடாது!அதுவே தான் நமக்கும்....நல்லா யோசிப்போம்!🤔😊👍

ரொம்ப அருமையான வரிகள்!..... 
நம்மை சந்தோஷமாக மற்றவர்கள் வைத்திருப்பது கடமை
 என எண்ணாமல் நாம் மற்றவர்களை 
சந்தோஷமாக வைந்திருப்பதை 
நம் கடமையாக எண்ணுவோம்!👉😊😀😊👍
                                                                        - தொடர்ந்து வாசிப்போம்

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 10)



இந்த புத்தகம் தினம் தினம் நாம் பலவாறு யோசிக்க தூண்டுகிறது...வாங்க! பார்ப்போம் பத்தாவது தலைப்பை...😊👍
இருக்கே!.....நிச்சயமாக..மேன்மை நோக்கி தான் செல்லுவோம்...சில நேரங்களில் வெளியில் தெரியாது ..கடவுளின் லீலைகள்...
பெரிய இழப்பை தடுத்திருப்பார்...
நம் கண்களுக்கு புலப்படாது எனினும் ஒரு நாள் உணர இயலும்...😊👍கஷ்டம் எல்லாம் சும்மா  தற்காலிகம் தான்! 🤔 
நினைக்கவே சும்மா  கெத்தா இருக்கே...
இறைவா நன்றி ! நன்றி ! நன்றி!
                                                                            - தொடர்ந்து யோசிப்போம்


புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 9)



இந்த புத்தகத்தின் ஒன்பதாவது தலைப்பு 
என்ன சொல்கிறது பார்ப்போம் வாங்க!
பொறுமை ஒரு வகை தவம்!காயப்படுத்தியவரை திரும்ப காயப்படுத்த தான் தோன்றும் அந்த இடத்திலும் மன பக்குவதோடு பொறுமை இருந்தால் எல்லாம் சாத்தியமே!

ஆமாம் ஏனென்றால் சும்மா ஒன்றுமில்லை ஒவ்வொரு நாளும் தொடர்கதை போல தொடரும் இந்த பொறுமையை சோதிக்கக்கூடிய விஷயங்களை கையாளும் போது கவனம் அவசியம்... 
விழிப்புணர்வு வேண்டும்...  
பொறுமைக்கே கொஞ்சம் பொறுத்து கொள்ளும் 
மன பக்குவம் வந்திடும்!

                                                                                      - தொடர்ந்து யோசிப்போம்!



புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 8)

இந்த புத்தக்த்தில் உள்ள எட்டாவது தலைப்பை பார்ப்போம் வாங்க!
நிஷ்காம்ய கர்மா  என்று சொல்லுவாங்க....
பலனை எதிர்ப்பார்க்காமல் நம் கடமையை செய்ய வேண்டும்... எதையும் செய்வதற்குள் பேரம் பேசும்
 நம் மனதை அடக்கி நல்வழி படுத்துவோம்! 
நிம்மதியை நோக்கிச் செயல் புரிவோம்!நன்றி!
                                                                    - தொடர்ந்து யோசிப்போம்