Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, October 31, 2009

விடைத்தாளின் வெளிப்பாடு..


விடைத்தாள் திருத்துவது/விடைத்தாள் மதிப்பிடுவது
Paper Correct
ion/Paper Valuation

விடைத்தாள் திருத்திட்டு இருந்தேன்... அதனால உன்னும் செய்யல...
ஒ....அங்க 10வது valuation போயிருந்தேன்...அப்ப பார்த்திருப்பீங்க...

இப்படி பேசுவது அறிந்திருப்பீர்கள்..
இது என்ன இரண்டிற்கும் வேறுபாடு...
விடைத்தாள் திருத்துவது என்பது ஆண்டின் நடுவில் திருத்தப்படும் விடைத்தாளில் மாணவர்கள் எழுதியதில் இதை நீ விட்டுவிட்டாய்..இந்த விடையின் எண் என்ன.. நீ சிலவற்றை எழுதவில்லை என கேள்விக்குறியிட்டு சுட்டி காட்டுவதோடு மதிப்பெண்களை போடுவதே விடைத்தாள் திருத்துவது Paper Correction எனச் சொல்லப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பிடுவது என்பது ஆண்டின் இறுதியில் அடுத்த வகுப்பிற்கு செல்லும் தேர்வின் விடைத்தாளில் எதுவுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை..ஏனென்றால் மாணவர்கள் இதை பார்க்க வாய்ப்பு இல்லை...ஆகையால் என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அதன் மதிப்பெண்களை மட்டுமே சுட்டிகாட்டபடுவதே விடைத்தாள் மதிப்பிடுவது Paper Valuation என சொல்லப்படுகிறது.

தவறுகளை திருத்த ஒரு வாய்ப்பாகவே இடையில் நடத்தப்படும் தேர்வுகள்...மதிப்பெண்கள் வந்தவுடன் ..மதிப்பெண்களை பார்த்து ஏன் டா/மா இப்படி வாங்கி இருக்கிற...இது எல்லாம் ஒரு மதிப்பெண்களா..என்று சொல்லுவது..நிறைய வாங்கிட்டா ..ம்ம்..இன்னும் வாங்கி இருந்திருக்கலாம்..
ரொம்ப அலட்சியமா இருக்கு போல உனக்கு ...ஏன் இப்படி கவனம் இல்லாம இருக்கிறாய்..என நாம் கேட்பதுண்டு.
இப்பொழுது கல்வித்திட்டத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சவே...போட்டி போட்டுக்கொண்டு....
அரசு பள்ளிகளோடு தனியார் பள்ளிகள்...
தனியார் பள்ளிகளோடு சிறப்பு தனியார் பள்ளிகள்...
சிறப்பு தனியார் பள்ளிகளோடு விளையாட்டின் வழியே கற்கப்படும் கல்வி...

இப்படி ஏட்டு கல்வியில் பல போட்டியின் இடையே ..இந்த பள்ளியில் நல்லா சொல்லித்தருவாங்க போல... அந்த பள்ளி.... இதை விட அந்த பள்ளி....எந்த பள்ளியாய் இருந்தாலும்..பாடத்திட்டம் ஒன்றாக தான் உள்ளது என்பதே உண்மை.அதனை சொல்லித்தரும் வகையில் தான் வேறுப்படுகிறது
இந்த பள்ளிகள்..இருந்தும் அம்மாவும் அப்பாவும் சொல்லி கொடுத்தால் தான் உயர வழி இருக்கிறது.

எந்த பாடமாக இருந்தாலும் அவர்கள் புரிந்து படிக்கிறார்களா..எனக் கேட்டு பாருங்கள்..எல்லா நாட்களும் செலவழிக்க முடியாவிட்டாலும்..விடுமுறை நாட்களிலாவது கேட்டு பாருங்கள்...
நிச்சயம் தெரிந்து இருக்கும் வாய்ப்பு 40% தான் உள்ளது..ஏட்டுக்கல்வி மதிப்பெண்கள் பெறவே வேகவேகமாக சொல்லித்தரப்படுகிறது.மிஸ்/சார் எழுதி போட்டாங்க..எழுதினேன்..சொல்லவில்லையே...
பள்ளி சென்று கேட்டால் உங்கள் மகன்/மகள் மெதுவாக இருப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல..என்பதே..

புரிந்து படிக்க வைத்தால் பின்னாளில் அவர்கள் வாழ்வில் உதவியாக இருக்கும்..மதிப்பெண்கள் வந்தவுடன் ..என்ன தப்பு பண்ணியிருக்கி
றாய்... ஏன் புரியுல...அடுத்த முறை இப்படி எழுது சரியா..என்று சொல்லுங்கள்...வேறு ஒரு மதிப்பெண்களோடு ஒப்பிடுவதை தவிர்த்து நீ முதல எடுத்த மதிப்பெண்களோடு இதை பாரு...குறைந்து இருக்கிறாய் ...அடுத்த முறை நன்றாக எடுக்க வேண்டும் ...கூடி இருக்கிறாய்..வாழ்த்துகள்..என அவர்களோடு சில நேரம் செலவழித்து உயர்வடைய செய்வோம்.
ஏதோ தெரியாத ஒருவரிடம் பேசுவதற்கு முன்பும் பின்பும் கைக்கொடுத்து கொண்டு வாழ்த்துகிறோம்..ஆனால் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் கைகொடுப்பது என்பது ரொம்ப குறைந்த சிலரே...உனக்கு என்ன வேணும் என்றே முதலில் கேட்க தான் செய்கிறார்கள்..

ஒரு முறை சின்ன குட்டீஸ் மிஸ் (நான் ஏதோ எழுதிக்கொண்டோ புத்தகங்களை அடுக்கி கொண்டோ இருந்தேன்...)மிஸ் எனக்கு அம்மா கைகொடுத்தாங்களே...என்றான்.. என்ன டா சொல்லுற...புரியல என்றேன்...நீங்க good போட்டதை நான் சாப்பிட போனபோது அம்மா என் நோட்டு பார்த்து அழகாய் எழுதியிருக்கிறாய் good வாங்கியிருக்கிறாயே என்று சொல்லிக் கைக்கொடுத்தாங்களே...என்றான்...அவ்வளவு ஒரு சந்தோஷம்..அவன் முகத்தில்..அன்றிலிருந்து நன்று என போடுவதை அதிகமாக போடத் தொடங்கினேன்...

எதுவுமே வாங்கித் தரவில்லை என்றாலும் கைகொடுத்து உற்சாக படுத்துவோம்...பிள்ளைகளின் சந்தோஷத்தில் பங்கு கொள்வோம்.தவறை திருத்த வழிக்காட்டுவோம்..மதிப்பெண்களின் அவசியத்தை புரிய வைப்போம்..மதிப்பெண்கள் வந்தால் அம்மா அப்பா திட்டுவாங்க..என்ற மனநிலையை மாற்றிடுவோம்..பயத்தை அகற்றுவோம்....என்று சொல்லி இப்பதிவை முடித்து கொள்கிறேன்..நன்றிகள்






Tuesday, October 27, 2009

வாகனங்களில் சுற்றத்திலே ஒரு பயணம்

அடுத்த வீட்டிற்கு நடந்தே
உடற் பயிற்ச்சிக்கு மிதிவண்டி
அடுத்த தெருவென்றால் விசையுந்து
பள்ளி மாணவர்கள் தானியிலே
சொகுசாய் செல்ல மகிழ்வுந்து
அனைவருடன் செல்ல தானூந்து
விழா என்றால் கூடு உந்துலே
சிறிய சுமை சிறியகூடு உந்துலே
பெரிய சுமை சுமையுந்துவிலே
நிறைய மக்கள் பேருந்திலே
வாய்ப்பு கிடைத்தால் தொடர்வண்டியிலே
அன்னார்ந்து பார்த்தால் வானூர்தி
இப்படி எங்கு சென்றாலும்
எதிலும் கவனம் முக்கியம்
பொறுமையாய் பயணித்து
விபத்தை தவிர்க்க
கைபேசியில் பேசியே
வாகனங்களை ஓட்டாமல்
பாதுகாப்பான பயணம் செய்து
நம் ஜீவனோடு இனிய
வாழ்வு வாழ்வோமே.....

Monday, October 26, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(4)......

கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே பகிர்ந்துள்ளேன்.

சமத்துவமும் சமாதானமும்
சாலையோர சண்டையை
சமாளிக்கும் வரைத்தான்
வெறும் பேச்சில் மட்டுமே
வெள்ளை புறா வருகி்றதே
தண்ணீர் தாகத்தை என்று
தான் தீர்ப்பாயோ இறைவா...

வியர்வையால் மட்டும்
உணரக்கூடிய உழைப்பு
ஊரிலே மின்சாரத்துண்டிப்பு
என்பதாலும் என்று உணர்வாயா?
சுதந்ததிரம் கிடைத்தது ஆனா
சுகமாக வாழ்வது எப்பொழுது?
சீரமைப்பு பணி என்று சொல்லி
சொல்லியே ஏமாற்றுவது ஏனோ....
.

என் மனதில் என்றென்றும் நீ!!!
வாழ்வாய் ஆபத்தில் உதவினாய்
வாழ்வு தனை மீட்டு கொடுத்தாய்
என்னவென்று சொல்லுவது உமக்கு
"நன்றி" என்ற மூன்றெழுத்தை மட்டுமா?

Friday, October 23, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(3)......

கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே பகிர்ந்துள்ளேன்.

என்றும் நீ எனக்கு
குழந்தை தான்...
என்னை அம்மா என்று
உயர்ந்த தாய்மைக்கு
எட்டி செல்ல வைத்தாயே!
நீ அம்மாவானாலும்
எனக்கு நீ குழந்தை தானே
என்னை வந்து பாராயோ?
ஏக்கத்துடன் ஓரு தாய்......

தன் நலன் காக்க தவறினாள்
தாயாக அவள் துடித்தாள்
திசைகளெல்லாம் நோக்கி கதறினாள்
தீமை ஒன்றும் நினைகாதவள்
துச்சம் என மதித்தால் தாங்கமாட்டாள்
தூக்கத்தையும் மறந்து விழித்திருப்பாள்
தென்னம்பிள்ளை நட்டு வைத்தவள்
தேரோடுவதை பார்க்காமல் இருந்தாள்
தைத்த சட்டை அணிந்து பார்த்தவள்
தொட்டில் கட்டி பெயர் சூடியவள்
தோடு போட்டு அழகு பார்த்தவள்
தௌகித்திரன் வரவை எதிர்பார்கிறாள்

Monday, October 19, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[4]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்

ஒளியும் தருவார்...ஆசிரியர்
அறிவொளியும் தருவார்
அதை ஓலியிலும் கேட்பார்
இதை தெரிவிக்கவும் செய்வார்
இணையதளத்தில் அவர்
இடுக்கைகள் பல தொடர்வார்
இணையாக மறுமொழியிடவே

நல்லொழக்கத்தால் உம்மை
நாடெங்கும் பாராட்டுவதை
பார்த்து ரசிக்கும் மனமே
பரவசத்துடன் உயர்வதை
பண்படுவதை வேண்டுதே

மறைக்கிறாள்...கஷ்டத்தில்
தவிப்பதை...வாழ்கிறாள்
மறைத்தே...உள்ளத்தில்
என்றுமே...உயர்ந்தாள்

மீண்டும் இவ்வுலகில்
பிறக்க வேண்டாமென
ஆண்டவனை கேட்டு
கொண்டிருக்கும் ஞானி
உணர்ந்தார் பிறவாமை
நிலையை சமாதியில்
அமர்ந்தார் உயிரோடு
அது தான் ஜீவசமாதியோ...

Saturday, October 17, 2009

"ங்க"

"ங்க".....குழந்தை கத்தும் போது...தோன்றியது..பின்னாளில் இந்த"ங்க" எங்கே போகிவிடுகிறது...என்ற எண்ணத்தில் எழுதியது..
"ங்க"...
பிறந்த குழந்தை
அழகாய் "ங்க"
கேட்கவே அழகாய்
ஒரு மொழி
வளர்ந்தவுடன்
ஏன் வா,போ
என்றே வரும்
வார்த்தைகள்
எங்கே போயிற்று
வா"ங்க",போ"ங்க"
யாரின் குற்றம்
பாசத்தால்
சொல்லிக் கொடுக்க
மறுத்ததா மனம்...
எதனால்...
என்றுமே "ங்க"
ஓர் தனி தான்
மரியாதையில்...
"ங்க"மறக்காமல்
மீண்டும்..
கொடுப்போம்
"ங்க"வளர்ந்தும்
வாழ்விலும்
மனதிலும்...
நிலைத்திருகட்டும்
நாம் சென்றாலும்...

Thursday, October 15, 2009

தீபஒளியில் இறைவன்


இல்லத்தின் இருளை அகற்ற
ஒளியாய் நின்றாய் நீ

உலகத்தின் இருளை அகற்ற
சூரியனாய் திகழ்கிறாய் நீ

மனதின் இருளை அகற்ற
அறிவொளியாய் நுழைந்தாய் நீ

இறைவா.....
தீபஒளியாய் பிரகாசிக்க
பயமுறுத்தும் பட்டாசுகளா
சில மணித்துளிகள் தானே
துடிப்புடன் விளங்குவாயே
பின்பு மறைந்து விடுவாயே
மறைந்து விளையாடுவதே
உன்னுடைய லீலையாகுமே

பட்டாசுகள் பளிச்சிடும்
ஆனால் சத்தம் பயமுறுத்துமே
காதுகள் அடைக்குமே
கம்பி மத்தாப்பு தெரிக்குமே
சாட்டை கீழ் நோக்கி இருக்குமே
சங்கு சக்கரம் சுழன்று கொண்டே
புஸ்வோணம் வானம் நோக்கியே
கலர் தீப்பெட்டி வண்ணமயமாய்
பாம்பு மாத்திரை நெளிந்து வளைந்தே
இப்படியே சென்றால்....
சரி இனிப்பாய் வந்தால்
சர்க்கரை நோய் உள்ளவர்
சீண்ட மனமில்லையே
ஆகையால் இறைவா
எல்லாரும் மகிழ்வாய்
ஒளி மயமாய் நீ
தீபஒளி திருநாளிலும்
ஜோதினுள் புகுந்து
வழியாய் வந்து
வாழ்வில் சிறக்க
வைப்பாய் என்றும்......

அனைவருக்கும் தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, October 14, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[3]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்

துன்பம் வரும் போது துவளாமலும்
இன்பத்தில் இன்புற்று துள்ளாமலும்
சமமாக எண்ணி வாழும் மனிதத்திலும்
இறைமை துணை புரிவதாக
இச்சுழற்சி வைத்தானோ...

தேவ தூதர்களாய்....நாம் மாறினால்
மனிதனிடம் எத்துணை ஆசைகள்
மலைத்தே நிற்போம் சற்று
நேரத்திற்கு ஓர் ஆசை
நிமிடத்திற்கு ஓர் ஆசை
நொடிக்கு ஓர் ஆசை என
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரமோ மனம்
விருப்பியதை தகுதி மீறி
அடைவதற்குள் அடுத்த ஆசை....
என்று தான் இதற்கு எல்லையுண்டோ
அன்று தான் நமக்கு ஓய்வுண்டு....

புரியல்லையோ....கணக்கு
புரிந்தாலும் அறிவதென்பது
கடினம் தான் ஏனென்றால்
கடவுள் போட்டு வைத்தது

இனிமையாக மாறிடுமே
இன்னல்கள் தீர்ந்திடுமே
இகழ்ச்சிகளை தவிர்திடனுமே
இன்பமாக வாழ்திடலாமே

குற்றமும் சொல்வாரே காண்...!
ஆற்றலும் வேண்டுமே அதை ஏற்க
ஏற்றமும் பெற வழியும் சொல்லுவார்
மற்றவரும் வஞ்சபுகழ்ச்சியில் வென்றிடுவார்
குற்றமற்றவரும் தன் நிலையை காட்டிடுவார்
வாழ்திடுவார் உலகம் போற்றும் மனிதராவார்

Tuesday, October 13, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[2]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்

நாமே முயலாமல்
பிறரை சாராமல்
நமக்கும் தளராமல்
கடவுளை வணங்காமல்
வெற்றி அடையாமல்
விதியை வெல்லாமல்
சாதிப்பது முடியுமோ.......

ஆகுமே எதுவாகுமே
எண்ணத்தை நல்குமே
சிந்தனையில் வருமே
கனவில் நிற்குமே
கருத்தாய் உருவாகுமே
காரியத்தில் இடம் பெறுமே

தள்ளாடலாமோ .??
தாத்தாவாக ஆனதாலா
சுறுசுறுப்பின் சிகரமன்றோ
ஓடி ஓடி உழைத்து கால்கள்
தளர்ந்து விட்டதோ
வாழ்ந்து வாழவைத்து வாழ்த்தி
வளம் பெற செய்தும்
தள்ளாடினாலும் ஆவலுடன்
எப்படியும் வாழ்த்தனும்
வருகை புரிந்த உமக்கு
பணிவான வணக்கங்கள்..

படர்ந்திடுமே கொடியாய்
மேலே வளர்ந்திடுமே
துணையோடு என்றுமே
தந்திடுமே திராட்சை
ச்சீ' ச்சீ' புளிக்குமே
விட்டதே அன்று நரி
காரணமாக தானே
இருந்தாமே உயரத்தில்...

இன்பம் நிலைத்திடுமன்றோ.............என்று
இசையோடு பல கனவுகளில் செல்கிறாள்
இளம்வயதிலே பிரிந்து புது மகளாய் புகுந்த
இல்லத்தை நோக்கி புது வாழ்வு மலர
இன்புற்று வாழ ...
இறையருள் உன்னோடு.....
இருக்கும் என்றே வாழ்த்தும் உற்றார் உறவினர்...

Monday, October 12, 2009

ஐம்புலன்கள்-தோல்

ஐம்புலன்கள்
தோல்

உனக்கு நிறத்தால் தான் வலிமை
வெள்ளையென்றால் மதிப்பு
கருப்பென்றால் உழைப்பு
மாநிறமென்றால் சிறப்பு

குழந்தையில் நீயே மென்மையாக
பின் வயோதிகத்தில் மேன்மையாய்
தோன்றி உணர வைப்பாய்
மென்மையின் ரகசியத்தை
வாழ்கையின் அனுபவத்தை

கண்களில்
காதுகளில்
மூக்கில்
நாவில்
தோலில் என

ஐம்புலன் மூலம் வாழ்வு சிறப்பு பெற
ஐம்பூதத்தை வேண்டுவோம்
ஐம்பொறி வழி நின்று
ஐக்கியம் ஆகுவோம் பேரானந்தத்தில்
அடைவோம் இப்பிறவியின் பலன்

Sunday, October 11, 2009

ஐம்புலன்கள்-நாக்கு

நாக்கு
உன் வேலை சுவைப்பது தானே?
சொல் ஏன் இப்படி செய்கிறாய்?
சுவைப்பதோடில்லாமல்
வன்மைச்சொல் பேச வைப்பதேன்?

இதைத் தான் வள்ளுவன்
உள்ளாறும் ஆறாதே என்று சொன்னாரோ?
அந்தோ! கடவுள் உனக்கு
பற்களை வேலியாக வைத்தும் இப்படியோ?

அறுசுவையை உணர வைக்கும் நீ
ஆட்டிப்படைப்பது நான்

என்றும் பிறழாமல்
பேச வைத்தால்
நான் வாழ்வேன்
மனதில்....

Saturday, October 10, 2009

ஐம்புலன்கள்-மூக்கு


ஐம்புலன்கள்
மூக்கு

சுவாசமாக நுழைகிறாய்
சுகந்தத்தையும் அளிக்கிறாய்
உணரவும் வைக்கிறாய்
வழியையும் தெரிவிப்பாய்

உன்னுள் காற்று உலவும் வரை
என்னுள் மௌனமாக இருக்கும் வரை
நான் வாழ்கிறேன் ....அது வரை
என்றே எண்ணுகிறேன் இது வரை

Friday, October 9, 2009

ஐம்புலன்கள்-காது

காது

கேட்பது தான் உன் வேலை
ஏனோ சண்டையிடவும்
காரணமாய் உள்ளாயே

இரண்டு காதுகள் இருந்துமே
இப்படியும் செய்கிறாயே
நன்மையை வைத்துக்கொண்டு
தீமையை புறம் தள்ளாமல்
நீ செய்வது முறையோ...

எனினும் உன் வேலையை
செய்து கொண்டுதான்
இருக்கிறாய்......
பொறுமையாக கேட்டும் கொள்கிறாய்

யார் எதை சொன்னாலும்
எவரை பற்றி பேசினாலும்
எங்கே எது நடந்தாலும்
எப்படியும் உன்னைத்தாண்டியே..

சத்தத்தை...
உன்னுள் ஏற்றி
என்னுள் உணர வைக்கும் நீ
இசையை
கேட்க செய்து உன்னில் நான்
அறிந்தது ஏராளம்....என்றும்
எம்மோடு பயணம் செய்வாய்
தொடரும்..

Thursday, October 8, 2009

ஐம்புலன்கள்-கண்

ஐம்புலன்கள் பற்றி நேற்று நான் எழுதியது....
கண்


உலகத்தையே பார்க்க வைக்கிறாய்
உள்ளத்தை மட்டும் பார்க்க மறுக்கிறாயே

அதனால் தான் நீதி தேவதை உன்னை
உதறித்தள்ளியதன் நோக்கமோ....

ஆனாலும் உன்னை தானம் செய்தால்
உள்ளத்தை அறிய முடியும் எனத்
தெரிந்தால் அவள் கண்களிலும்
நீராய் நீயே உணர்வாயிருப்பாயோ....

பார்க்க தான் உதவி செய்வாய் கண்ணே
என்றாலும் பேசவும் செய்வாய் தானே
நவரசத்தையும் உன்னில் காணுவது

இறைமையின் மகிமையன்றோ....

உன்னை புரிய எத்துணை அறிவிருந்தும்
என்னை நீ ஆட்கொண்டு
பார்க்கிறாய்...
அழுகிறாய்.....
பேசுகிறாய்.....மௌனமாக ஓர் மொழியில்

வெளிக்காட்டுகிறாய்....என் கோபத்தையும்
ஆவலையும்......
கவனிப்பையும்....
கண்காணிப்பதும் என நீ என்றும் என்னுள்

சில நேரம் மட்டும் உன்னை மூடியும் கடவுள்
தெரிவாரோ...... தியானத்தில்....அமைதியில்....
எனினும் நல்லனவற்றையே பார்க்க வைப்பதில்
நீ வாழ்க... வளர்க....வயதானாலும் வழிமாறாமல்
எம்மோட பாதையை காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்
வாழும் ஜீவன்.
தொடரும்....

Wednesday, October 7, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?

கடைசியில் முடியும் வார்த்தையோ வரியில் நாம் தொடர வேண்டும்...அப்படி விளையாடிய போது எழுதியதில் சில...
அருள்வரும்
என்றே
பொருள் தேடி சென்று
அவ்வருள் பொருளுக்கு
அப்பாற்பட்டது என்றெ
உணர்ந்து.... துறந்து ....
மெய் எது என்றால்
மேன்மை தரும் இறைமையன்றோ

நீயே தானுரைப்பாய்
நான் அது செய்தேன்
இது செய்தேன் என்பாய்
அன்று அன்போடு செய்தாய்
இன்று செய்ததை நீயே
என்றும் சொல்லி காமிப்பது முறையோ....

இல்லையென்றால் என் செய்வேன்
கடைசி நாளான இன்றாவது கட்டுவேன்
தேர்வுக்கு பணம் என்று எண்ணிணேன்
ஆனால் நாளையென்றால் நிற்பேன்
வெளியில் என்றெப்படி உரைப்பேன்
உங்களுக்கு மனம் நெகிழ்ந்தேன்
என்றாலும் வேண்டுமென்றேன்
இன்றே அளிக்க கூறினேன்

விழிநீரால் வேண்டுதல்செய்கிறேன்
துன்பத்தில் துவண்ட போது நான்
இறைவா,கடவுளே எங்கே நீ
உதவி செய்வார் எப்படியும் அவர்
ஆனால் நன்றி சொல்ல மட்டும் நீங்கள்
மறப்பதேனோ பேரருளை பெற்றவர் தம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாம்
ஒரு நாள் பேரின்பத்தை அடைவோம்
என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்

சுயநலம்

சுயநலம்
தனக்கு
தான் என்று வாழ்ந்து
அன்பை மறந்து
வாழ்வது .....ஓர் வாழ்வா?

Monday, October 5, 2009

பழமொழி, புது மொழி இது நம் மொழி

சின்ன வரியில் பிரதிபலிக்கும் எண்ணத்தை விளையாட்டில் வெளிவந்தவை....
வார்த்தை கொடுக்க பட்டதில் தோன்றியதை எழுதலாம்....

ஜீவனுள் வாழும் இறைமை...இறைமை அன்பிலே வாழும்
வாழ்வு..

புத்தி மனதை வெல்வது புத்திசாலியாம்
மனம் புத்தியை வெல்வது கோபத்திலாம்


மகிழ்ச்சி ஓர் மாயை

கண் ஓர் சுற்றத்தின் பிரதிபலிப்பு

குற்றம் பார்ப்பதற்கு முன்
குற்றமற்றவராய் இருப்பது நல்லறம்


தன் வாழ்நாளில் அன்னதானம் செய்வதால் சிறக்கும்

வலி தாங்கி்யது தான் வறுமை

உழைத்து தானே அப்பா உயர்ந்த இடத்தில் உயர வைக்கிறார்

பொடி நடையாய் நடந்து நடந்து கால்கள்
கேட்கிறதாம் என்று முடியும் உந்தன் தேடல்.

போதும் என்ற எல்லையில்லை கல்விக்கற்க

சொல் வன்மைக்கு நாக்கு தானே காரணம்

சொல் பிறர் கவனிக்க சொல்

சிறப்பு என்பது மனத்ருப்தியின் முழுமை

நிட்சயம்...வெல்வாய் நம்பிக்கையோடு இரு

Sunday, October 4, 2009

அம்மாவின் பாசம்


அம்மா அடுப்படியில் தன் வாழ்நாளில் முக்கால் வாசி வாழ்கிறார்...
ஆனாலும் அம்மாவை போல் அதிபுத்திசாலி உலகிலில்லை.

யார் யாருக்கு எது எது பிடிக்கும் என்று தெரிந்து இருப்பது அம்மாவின்
சமையல் சாம்ராஜ்ஜியத்தின் ரகசியம்....

யாருக்காகவும் விட்டுகொடுக்கமாட்டார் தனது ராஜ்ஜியத்தை...
எனினும் விட்டுகொடுக்கும் மனசு உடையவர் தான்
பார்த்து பார்த்து சமைத்து கொண்டிருப்பவர் தான் ஆனால் சீப்பு
காணாமல் போனால் கூட கேட்டால் சரியான இடத்தை சுட்டி
காமிப்பார் அம்மா...

தொலைக்காட்சியை பார்க்கமாட்டார்(கேட்டுபதோடு) எனினும் நம்மையும் மிஞ்சி
தகவலை கொடுப்பார்.

அம்மா ஓர் களஞ்சியம்...
நல்லவிதையை மனதில் விதைப்பவர்....
பழக்கத்தை சொல்லி கொடுப்பவர்....
(யாராவது விருந்தாளி வந்தால் .....வாங்க ன்னு கூப்பிட்டாயா? என்று ஒரு முறை கேட்டும் தெரிந்து கொள்வார்)

கவனத்தோடு கையாளுபவர்....
பார்த்து பார்த்து செய்பவர்...
அம்மாவும் அப்பாவிடம் தான் தன் கோபத்தை காட்டுபவர்....

சமாளிப்பிலே அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே.
செல்லமாய் வளர்த்து
பெண்ணை திருமணம் செய்து வைத்து
அவள் ஓர் அம்மாவாக போது
அம்மா தன் மனதில் சுமக்கிறார்...

தன் மகள் பெற்றெடுத்தவுடன் தான் அம்மா பெருமூச்சுவிடுகிறார்...
பேரனோ...பேத்தியோ பார்த்து பார்த்து பூரிப்பு அடைகிறார்.

பையனா அம்மாவுக்கு ஒர் தனி பிரியம் தான்...
தனியா பிடிச்சதை செய்து கொண்டு தருவதென்ன....அட அடா
சாப்பிடலணா மட்டுமே செல்லமாய் கோபம் வேற....

அப்பாவிற்கு ஓய்வுண்டு....ஆனால் அம்மாவிற்கு இல்லை....
இடைஇடையே உணவகத்தில் உணவு அருந்தும் போது மட்டும் சிறிய
இடைவேளை...அவ்வளவு தான்...

அம்மா என்றால் அன்பு..
அதை உண்ர்ந்தால் பண்பு...
இதையே இத்திரியில் நம்பு...

அம்மாவின் பாசத்தில் திளைத்திருப்போம்
என்றென்ன்றும் மகிழ்ச்சியோடு வாழுவோம்.

Saturday, October 3, 2009

ரயில் பாதை

பாலத்தின் மேலே தொடர்வண்டி போவது போல் வரைந்து பார்த்தது....

அப்பாவின் அருமை

தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து
பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து
நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில்
முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர.....
அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்....

கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார்.
தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு
ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு...

மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார்.
அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார்
பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும்
செய்வதில்லை..ஏனோ!!!

வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்)

மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு
செய்யும் அப்பா......
பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக
சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா...

பேரனோ.... பேத்தியோ.....
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு
இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,,
(அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா?
பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....)

இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா.....

அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல.....
இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்...
அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி)
சமாளிக்கும் திறமை...
தனக்கென வாழாதவர்....
இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்...
மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்...
அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை....

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும்
இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும்
மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....

அப்பாவின் அருமை அன்பிலே...
அதை நாம் புரிதலே....
இத்திரியிலே.....
அப்பாவின் பாதம் வணங்குவோம்
என்றும் அவரை போற்றுவோம்.

Thursday, October 1, 2009

கணிணி வழியே நான் வரைந்த மயில்




photoshop கற்றுக்கொள்ளும் போது நானே முயற்சி செய்து வரைந்து பார்த்தேன்.அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.