Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, December 28, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(4)

5]பாரபட்சம் பார்ப்பது எதனால்?

இதுக்கெல்லாம் காரணம் சொல்வதே பாரபட்சமானதுதான்...
ஏன்னா எனக்குப் பிடிக்காத காரணங்களைத் தானே இங்கே சொல்லுவேன்...

பாரம் - வெயிட்டேஜ்..
பட்சம் - பக்கம்

பாரபட்சம்.. வெயிட் உள்ள பக்கம் சார்ந்து நிற்பது..

எப்பவுமே அதைத்தான் செய்கிறோம். எதை நாம் பாரம் என்று எண்ணுகிறோமோ அந்தப் பக்கம் சாய்கிறோம்.

பாரபட்சம் பார்க்காம முடிவு எடுப்பது என்பது இயலாத காரியம்
6]குடுப்பத்திலும் பாரபட்சம் உண்டா என்பது பற்றி சொல்லுங்கள்.....
அதிகபட்ச பாரபட்சமே குடும்பத்தில்தானே இருக்கு...

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கிறோம் பேர்வழி என்று எல்லா விசயத்திலும் தன்னை தாழ்த்திக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுப்பது நல்ல குடும்பம்.

என் வேலை நடந்தால் சரி என விட்டேத்தியாக இருப்பது இன்னொரு வகைக் குடும்பம்.

மூடுக்கு ஏற்ப கொஞ்சுவதும் மிஞ்சுவதும் இன்னொரு வகைக் குடும்பம்..

நான் தான் முக்கியமான ஆள், நான் சொல்றதுதான் சரி என ஒவ்வொருவரும் வீம்பு பிடிப்பது இன்னொரு வகைக் குடும்பம்.

எப்படிப் பார்த்தாலும் குடும்பத்தில் நடுநிலைமை என்பதே மிகக் கடினமான ஒன்று.

Sunday, December 27, 2009

குட்டீஸ்...(10)


குட்டிமா உள்ளே சென்றவுடம் பள்ளியின் வளாகத்தை பார்க்கிறார் அருண்...
பின் விடை பெற்றுக் கொண்டு அலுவலகத்திற்கு செல்கிறார்...
அம்மா அங்கே இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறாள்...குட்டிமா சென்ற பாதையை பார்த்து கொண்டே இருக்கிறாள் லதா.....

குட்டிமா உள்ளே சென்றவுடன் வண்ணமயமான இருக்கைகள் அழகாக வரிசையாக இருந்தது..ஒரு பக்கம் கரும்பலகையில் மிக்கி மவுஸ் படம்...
இன்னொரு பக்கம் உள்ள கரும்பலகையில் அழகான பூங்கொத்து ஏந்திய இரண்டு மாணவர்கள்...என வரைந்து வைத்திருந்தார்கள்...வண்ண மயமான தோரணங்கள்....ஆங்காங்கே ஒட்டி வைக்க பட்டிருந்த வண்ணத்தாள்கள்.....என வகுப்பு அறை அலங்கரிக்க பட்டிருந்தது...

இவை எல்லாவற்றையும் பார்த்த சந்தோஷினிக்கு மற்ற மாணவர்களின்
அழுகைக்குரலும் கேட்கிறது...அப்படியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
பின் அங்கே உள்ளே செல்லும் வழியில் தோழியைப் பார்த்து செல்ல வந்த இன்னொரு ஆசிரியை நோட்டு புத்தகங்கள் ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள்...

சந்தோஷினி தன் இருக்கையில் இருந்து ஓடி வந்து அந்த ஆசிரியையின் கால்களை பற்றி கொள்கிறாள்....சற்றும் எதிர்ப்பார்க்காத ஆசிரியை சந்தோஷினியிடம்
என்னம்மா.... என்ற குரல் கொடுக்கிறாங்க...கேட்டவுடன் குட்டிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் கையை எடுக்கிறாள்...ஆசிரியை அந்த நோட்டு புத்தகங்களை மேஜையில் வைத்துவிட்டு....சந்தோஷினியிடம்....பேசுறாங்க..அங்க உள்ள பொம்மைகளை காட்டி விளையாடலாமா..என்று கேட்கிறாங்க....
லதாம்மா கட்டி இருந்த அதே மாதிரி புடவையை அணிந்திருந்ததால் அவள் வேகமாக வந்தது....என்பதை தெரியாது அந்த ஆசிரியைக்கு....குட்டிமா அப்படியே ஒன்றும் பேசாமல் நிற்க்கிறாள்.

பின் மணி அடித்தவுடன்....அழுகின்றவர்களை ஒரு வகுப்பு அறையிலும் அழாதவர்களை அடுத்த ஒரு அறையில் உட்கார வைத்தனர்..
சந்தோஷினியிடம் லதாம்மா..அழாமல் இருக்கனும் அம்மா இங்கேயே உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னது புரிந்தது...

முதலில் ஆசிரியை மட்டும் கடவுள் வணக்கத்தை பாடுறாங்க....
எல்லா குழந்தைகளுக்கும் கைக்குப்பி வணங்க சொல்லுறாங்க...அப்போ வீட்டில அப்பா அம்மாவும் சாமி கும்பிடும் போது சொல்லி தந்தது போல சரியாக வைத்து கொள்கிறாள்...ஆசிரியை ஒவ்வொரு குழந்தையாக பார்க்கிறாங்க....
"வெரிகுட்" என்று சொல்லுறாங்க...சரியாக கைக்குப்பி வணங்குபவர்களை...
அப்போ சந்தோஷினியையும் "வெரிகுட்" என்று சொல்லுறாங்க...
கடவுள் வாழ்த்துப் பாடலை சொல்லுறாங்க...கண்களை மூடிக்கொண்டு...
பின்பு ஆசிரியை சொல்லுறாங்க.....
எல்லாரும் கைத்தட்டுங்க....இன்னிக்கு நம்ம கிளாஸ் பிரியாவிற்கு பிறந்தநாள்...எல்லாரும் கைத்தட்டுங்க....என்று சொல்லிக் கொண்டே ஆசிரியை
Happy birthday to you...
Happy birthday to you...
Happy birthday to you...... priyaa...என்று பாடிக்கொண்டே நகர்ந்து எல்லோரிடமும் போகிறாங்க..கையை தட்ட சொல்லி செய்கை காமிக்கிறாங்க.....
வெரிகுட்....என்று சொல்லிவிட்டு...
பின்பு எல்லாரையும் அமர சொல்லுறாங்க...
ஆசிரியை அந்த சட்டை பைக்கு மேல் குத்தி இருக்கும் ஐ.டி.கார்டை பார்த்து பார்த்து வருகை பதிவேடை குறிக்கிறாங்க...
அதற்க்குள் அங்கே நிவாஸ் எந்திருக்கிறான்...நிவாஸ் சிட் டவுண் என்று குரல் கொடுக்கிறாங்க...
அப்பறம் நீங்க எல்லாரும் அழகாக பாடினா....எல்லாருக்கும் பிரியாவோட சாக்லேட் தருவேன்...
பாடிருங்களா...என்று ஆசிரியை சொல்லுறாங்க...
நிலா நிலா ஓடி வா...
நில்லாமல் ஓடி வா...
மலை மேல ஏறி வா....
மல்லிகைப்பூக் கொண்டு வா...என்று செய்கை செய்து கொண்டே பாடுறாங்க...
எல்லாருமே சொல்வோமா....
சொல்லுங்க..நிலா.... நிலா...அங்க பாருங்க....மேல...இருட்டானதும் வீட்டல போய் பாருங்க...இது மாதிரி வானத்தில தெரியும்....என்று புத்தகத்தை காட்டுகிறாங்க...
மேல இருக்கும் நிலாவை கூப்படலாமா..கையை எல்லாரும் தூக்கி கோங்க..ம்...மேல பார்த்து சொல்லுங்க...நிலா....நிலா...
அப்போ...மெலிதான குரலில் நில் நில்தலையை ஆட்டிக்கொண்டு நிலா சொல்லி பார்க்கிறான் கௌதம்...
கார்த்திகா கத்துகிறாள்..நிலா..நிலா...என்று எல்லாரும் அவளையே வேடிக்கை பார்க்கிறாங்க....
சந்தோஷினி ஆசிரியை பார்க்கிறாள்....அவுங்க செய்வது புதிதாக இருப்பதை உணர்கிறாள்...தானும் அப்படி செய்து பார்க்கிறாள்...

அதற்குள் லதா அம்மா..குட்டிமா அழுகிறாளா...பாருங்க என்று மீனியலிடம் கேட்கிறாள்...இல்லங்க..நான் அங்கிருந்து தான் வரேன்... சமத்தா உட்கார்ந்திருக்கிறாள் என அந்த மீனியல் வழக்கம் போல எல்லா மாண்வர்களின் பெற்றோரிடம் சொல்லுவது போல சொல்கிறாள்....

உள்ளே அழகாக பாடி முடித்த சிறார்களுக்கு சொன்ன படியே..சாக்லேட் கொடுக்கிறாங்க ஆசிரியை...

பின் எல்லார் பைக்குள் இருக்கும் ஸ்னாக்ஸ் பாக்ஸை திறந்து சாப்பிட சொல்லுறாங்க...
தண்ணீர் குப்பியை திறந்து கொடுத்து கொண்டே..ஒவ்வொருவரிடமும் வருகிறாங்க...அப்போ அதற்குள்..அங்க.....
(தொடரும்)

Saturday, December 19, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(3)

3]உனக்கு வந்தால் தெரியும் என்று சொல்லுவது கோபத்திலா?
இல்லையென்றால் தன்னைப்போல் கஷ்ட படட்டும் என்பதாலா?
உனக்கு வரட்டும் நான் அப்போ பார்க்கிறேன் என்று சொல்லுவது நடக்க நடைமுறையில் சாத்தியமா

நம் உணர்ச்சிகளை இன்னொருவருக்கு சொல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இலக்கியங்களில் இதற்காகத்தான், உவமை, உருவகம் எனப் பல முறைகள் உள்ளன. நம் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை என்னும் பொழுது அதை அனுபவித்தால்தான் உனக்குப் புரியும் என்று சொல்கிறோம். அது கோபம், விரக்தி, சோகம் மற்றுமல்ல காதல், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளின் போதும் கூடத்தான் இதையெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்கிறோம். ஆக என் உணர்வைப் புரிந்து கொள் என்பதன் மறுவடிவமே உனக்கு வந்தால்தான் தெரியும் என்பதும். அதன் பொருள் வார்த்தைகளால் உனக்கு இதைப் புரிய வைக்க என்னால் முடியாது என்பதாகும்.

அது நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.. நாம் கோபத்தில் மட்டுமே இதை நினைவில் பதித்துக் கொண்டு சொல்கிறோம். மற்றபடி சொன்னதை மறந்துவிடுகிறோம்.

உனக்கும் இதே போல் சூழ்நிலை வரும் என்று சொல்வது நடக்கவும் செய்யலாம். நடக்காமலும் போகலாம். அது நடக்க வேண்டும் என எண்ணுவது கோபத்தில் மட்டுமே! அதனால்தான் இந்தக் கேள்வி உங்களுக்கு முளை விட்டிருக்கிறது.
4]அன்பளிப்பகள் வாங்கி கொண்டால் கொடுத்தவர் நம்மை மறக்க வாய்ப்புள்ளதா....
வாங்கி கொண்டவருக்கு ஞாபகம் அந்த அன்பளிப்பை பார்க்கும் போது இருக்கும் தானே...
ஆனால் கொடுத்தவர்.....
அன்பளிப்பகள் சமாதானம் செய்வதற்கும் ஒரு யுக்தியா?
உண்மையான அன்பினால் தருவதா?பின்பு திரும்பி ஒரு நாள் வேற
வழியில் வரும் அதனாலா?கடமைக்கு தருவதா? எப்படி புரிந்து கொள்வது.....

அன்பளிப்புகள்.. அன்பு பழிப்புகள், அன்பழிப்புகள்.. இப்படி நிறைய வகை இருக்கே சரண்யா!!!

எல்லோரையும் அளக்க ஒரே அளவுகோல் இல்லை.. அன்பளிப்புகள் என்பவை ஒரு அடையாளம் அவ்வளவே! கொடுக்கிறவரை நினைவு வச்சுக்கணும் என்பதும், வாங்கினவர் கடன்பட்டவர் என்பதும், மரியாதை நிமித்தம் என்பதும், சமாதானத் தூது என்பதும், சும்மா கடமைக்கு என்பதுவும் அவரவர் கண்ணோட்டம் அவ்வளவுதான்.

ஏன் கோடுத்தோம் என்ற உண்மையான காரணத்தை ஒரு சிலர் தவிர யாரும் அவர்களாக சொல்லப் போவதில்லை.
அன்பளிப்புகள் நினைவுச் சின்னங்கள் என்ற மட்டில் இருந்து விட்டுப் போகட்டும்.

கொடுத்தவர் மறந்த அன்பளிப்பே சிறந்த அன்பளிப்பு ஆகும்.
அன்பளிப்புகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதே மிகவும் நல்லது. பல சிக்கல்களில் சிக்காமல் இருக்க அது உதவும்.

Saturday, December 12, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(2)

2]பணத்திற்கும் மதிப்பிற்கும் சம்மதம் உண்டா
மதிப்பு யாருக்கு அளிக்கப்படுகிறது?
மதிப்பும் மரியாதையும் பிண்ணப்பட்டுள்ளதா?

பணம் உருவாக்கப்பட்டதே மதிப்பை அளவிடத்தானே சரண்யா!!!

ஒரு பொருள் எவ்வளவு எளிதில் கிடைக்கிறது? அது நமக்கு எவ்வளவு முக்கியமாய் தேவைப்படுகிறது? இவை இரண்டும் ஒரு பொருளின் மதிப்பிற்கான அளவுகோல்கள். இவை பணம் என்ற அலகினால் அளக்கப் படுகிறது.

பொருளின் மதிப்பை அளக்க உண்டாக்கப்பட்ட பணம், அதை வைத்திருப்பவனின் மதிப்பையும் அளக்க உபயோகப்பட ஆரம்பித்தது.. ஆனால் அதை எப்படி அளந்தார்கள் என்பதை புறநானூற்றில் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒருவரிடம் உள்ள பணம் மற்றவர்களுக்கு எந்த அளவு பயன்படுகிறதோ அந்த அளவிற்கு அவருக்கு மதிப்பு உண்டாகிறது.

மதிப்பு என்பது பணத்தைப் போல மனிதருக்கும் உபயோகம் உள்ள அளவிற்கே அளிக்கப்படுகிறது.

தெண்ணீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்,

மதிப்பு என்பது உள்ளூர உள்ளது, மரியாதை என்பது அதைச் செயலில் வெளிப்படுத்தல் ஆகும். மதிப்பை கொண்டிருக்கிறோம். மரியாதை செய்கிறோம்..

பணத்திற்கும் மதிப்பு மரியாதைக்கும் சம்பந்தம் உண்டு, ஆனால் பணம் மட்டுமே மதிப்பு மரியாதைக்குக் காரணம் அல்ல. உபயோகமாக இருக்க இன்னும் பல வழிகள் இருக்கின்றன.

Friday, December 11, 2009

குட்டீஸ்...(9)


இப்போ அழைத்தது......அப்பாவின்......அப்பாவே தான்.."என்ன பத்து நிமிடமாக கைப்பேசியில் அழைத்தும் பதில் இல்லையே...மருமகளும் கைப்பேசி எடுக்காமல் இருப்பதால்... தொடர்ந்து அழைத்திருக்கிறார்" சந்தோஷினியின் தாத்தா...

"அப்பா...சொல்லுங்க பா"...என்றார் அருண்...
"என்ன பா எப்படி இருக்கிற"...என்று கேட்கிறார்...மகன் நலமாக இருக்க வேண்டும் என மந்தில் நினைத்துக் கொண்டே....

"நலமாக இருக்கிறேன் அப்பா..சந்தோஷினியிடம் விளையாடிக் கொண்டு..."
"ஒ அப்படியா...பேத்தி என்ன சொல்லுகிறாள்"....
"ஸ்கூல் சேர்த்தாச்சு பா..இன்றைக்கு தான் முதல் நாள் போக போகிறாள்..."
லதா எப்படி இருக்கிறாள் என நலம் விசாரிக்கிறார்..
பின் அம்மாவிடம் பேசுகிறார் அருண்....
அப்பா கேட்க்காமல் விட்டதை அம்மா கேட்கிறார்..
"ஏன் பா இவ்வளவு நேரம் போன் எடுக்க..."
"அதுவா..ஒன்றுமில்ல அம்மா...."
"சொல்லுப் பா..."என்று கேட்கிறாங்க...
அம்மாவிடம் சகஜமாக எல்லாவற்றையும் சொல்லும் அருண் சந்தோஷினியை காணாமல் தவித்ததை சொல்கிறார் அருண்...பின் அம்மா ஆறுதலாக நீயும் தான் இப்படி பலமுறை காணாமல் போகிவிடுவ....சாப்பிடும் போது உன்னை தேடி தேடி தான் கண்டுபிடிக்கணும்....சொல்லுறாங்க..
அருண் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகைத்து லதாவிடம் கொடுக்கிறார்..
லதா..கவலைப்படாத ம்மா என்று சொல்லி கைப்பேசியை வைத்து விடுகிறாள் பாட்டி..
என்னங்க நாம அங்க போயி பார்த்துவிட்டு வந்திடுவோம்...என்கிறாள் பாட்டி தாத்தாவிடம்...
மறுப்பேச்சு பேசாத தாத்தா சந்தோஷினியை பார்க்கும் ஆவலில் இருவரும் கிளம்புகிறார்கள்...

இங்கே சந்தோஷ்னியை ஸ்கூல் கிளம்ப தயார் செய்கிறாள் அம்மா லதா..
அருண் ரெடியானவுடன் மூன்று பேரும் சந்தோஷினியின் பள்ளிக்கு போகிறார்கள்..
முதல் முறை அல்லவா...சந்தோஷினி கிட்ட அம்மா இங்கே உட்கார்ந்திருக்கேன் குட்டிமா..நீங்க உள்ள போயி படிச்சுட்டு வா ம்மா என்றாள்...
ஒன்று அறியாதவளாய்..தலையாட்டினாள்...
உள்ளே செல்லும் அழகை இருவரும் பார்த்து ரசிக்கின்றனர்...

சின்ன சிட்டு ஒன்று
செல்ல சிட்டு தான்
பள்ளி செல்லும் அழகு
பார்த்து கொண்டே கண்கள்

ஆவலாய் உள்ளே செல்லும்
ஆனந்தத்தில்...குட்டிமாக்கூடவே
செல்கிறது அவர்களின் மனமும்....

(தொடரும்)

Monday, December 7, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(1)

நம் எல்லாருக்குமே ஒரு சில கேள்விகள் மனதில் தோன்றும் அதை நாம் கேட்டு தெளிவு பெற்றிருப்போம்...அப்படி நான் தமிழ்மன்றத்தில்
கேட்டதில் திரு தாமரை செல்வன் அண்ணா அவர்கள் சிறப்பாக ரொம்ப பொறுமையோட அதே சம்யம் தேவைப்படும் இடத்தில் விளக்கமாகவும் பதில் அளித்தார்கள்...அதை நான் இங்கு உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்...
தமிழ் மன்றம் நம்மை மேலும் வளர்க்க செய்கிறது...இங்கு நம் பதிவை நாம் எழுதியதாக இருப்பதால் நம்முடைய திறமை மேலும் வளர்க்க படுகிறது...இங்கு அனைத்தும் கதை,கவிதை,கணினி பற்றிய தகவல் எனக் கற்றுக் கொண்டவை ஏராளம்..மன்றத்தில் நானும் சேர்ந்ததில் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி...
1]ஆத்திரம் அடையும் போது தவிர்க்க என்ன செய்வது?
ஏன் நம்மையே கட்டுபடுத்த முடியாமல் போகிறது.....
அதீத கோபத்தால் வருவது தான் ஆத்திரமா?
எடுத்தெரிந்து பேசுவது தான் ஆத்திரமா?
தனக்கு ஏதும் நடக்கவில்லை என்பதால் வருவது பொறாமையா? ஆத்திரமா?

அ) கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்.

கோபம் வரும்பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பயம் அளவு மீறிப்போய் அட்ரினலும் எக்கச்சக்கமாய் சுரக்கிறது. இதனால் ஒரு போதை கூடிய நிலைக்குப் போய் விடுகிறோம். மூளைக்கு இரத்தம் செல்வது குறைந்து போகிறது. இதனால் சிந்தனை மழுங்கி விடுகிறது. நமது கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம். அனிச்சை செயல்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் உண்டாகும் பின்விளைவு தான் ஆத்திரம். திட்டுதல், அடித்தல் இன்னபிற கோபத்தின் வெளிப்பாடாகிய ஆத்திரம்.. எல்லாவற்றிற்கும் அடிப்படை இயலாமை என்ற தாழ்வு மனப்பான்மைதான்.

ஆளுமை மனப்பான்மை கொண்டவருக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டு.. அதைத்தான் அவர்களின் கோபமும் காட்டுகிறது. எப்போதெல்லாம் நான் என்ற அகந்தைக்குச் சவால் வருகிறதோ அதை எதிர்கொள்ள இயலாத போது அவர்களுக்குக் கோபம் வரும்.

ஆ)சில நேரங்களில் எதைப்பற்றியுமே சிந்திக்க முடியாமல், மூளை ஸ்தம்பித்துவிடுகிறதே....இந்த வெறுமையை எப்படி சமாளிப்பது....


சிந்திக்க முடியலையே என்பதே ஒரு சிந்தனைதான்.

உங்களுக்கு கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படுத்தாத, சிறிதும் ஆறுதலைத் தருவதான எந்தச் சிந்தனையும் வரவில்லை என்பதுதான் நிஜம்.

காரணம் படபடப்பு, கோபம், பயம் இதைப் போல பல உணர்வுகள்...

முதலில் வெளியே வாருங்கள்.. (ஓடும் டிரெய்னில் இருந்தால் என்ன செய்யறது.. சரி இருக்கும் இடத்தை விட்டு சற்று வசதியாக மாறிக் கொள்ளுங்கள்). கண்ணில் தென்படும் 5 விஷயங்களின் நல்லது என்ன கெட்டது என்ன என்று யோசியுங்கள்..

இப்படி ஒரு ஐந்து நிமிஷம் பத்து நிமிஷம் செலவிட்டு விட்டு அப்புறம் சிந்தியுங்கள் போதும்.

இ)கோபத்தை உடனடியாகக் குறைக்க என்ன செய்யலாம் ......


கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்

நம்மைப் போன்ற மக்களுக்கு உடனடியாகக் கோபத்தைக் குறைக்க ஒரு வழி.. எதாவது ஒரு தாளை எடுத்துக் கொண்டு மனம் போனபடி கிறுக்கி விட்டு.. சிறிது நேரம் கழித்து சிறிது தண்ணீர் அருந்துவது.

முயற்சித்துப் பாருங்கள்.. கோபம் சடாரெனக் குறைவதைக் காண்பீர்கள்..கொஞ்சம் கோபம் தணிந்த உடன் ராஜாவின் ரவுசு பக்கம் ப்டித்தால் கோபம் சுத்தமாப் போயே போச்சு.

இங்கே கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லி இருக்கிறேன்..

தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் முதலில் எழுவது ஏமாற்றம். ஏமாற்றங்கள் அதிகரிக்கும் போது இயலாமை மேலோங்கி கோபமாகிறது.

Saturday, December 5, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[6]

வாசி நீ
நல்லதை
மட்டுமே...
புரிந்து வாசி
மதிபெண்ணல்ல
வாசித்தால்...
வாழ்வின்
நிதர்சனம்...

ஆம் என்று சொல்வது
உண்மையை ஏற்பது
இல்லை என்று சொல்வது
உண்மை அல்லாதது என
எடுத்து கொள்வதே இல்லை
மறுப்பதும்,மீறுவதும்
என்பது உரைப்பது
ஏற்கக்கூடிய ஞாயமோ?

என்றும் தரிசனம்
கிடைக்க காத்து
வாழ்வின் இன்பம்
துன்பம் எல்லாம்
இறைவன் அளிக்கும்
நிதர்சனம் என்றே...

இன்று... என்பது
தான் நம்பிக்கை
என்று...என்பது
நம்பிக்கையின்மை
வாழ்க்கை என்ற
கையை நம்பிக்கை
என்ற கையில்....

அறிவேன் என்பது
நம்பிக்கையில் வருவது
அறிந்தவுடன் மறப்பது
அறியாமையா..
இயலாமையா...
அறிவில்லாததா...
இயல்பானதா...

முடிவதில்லை என்ற
எண்ணமில்லை என்பதே
வாழ்வின் சாதனைகளை
பல சாதிக்க இயலுமோ

Thursday, December 3, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[5]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்....இங்கு பகிர்ந்து கொள்கிறேன்....

நானிலத்தில் போற்றி கொண்டு
வாழ்ந்தாலும் உன்னை வந்து
அடைவதே சொர்க்கம் என்றும்
பேரானந்தம் என்றும் முழுமை
பெறுகிறது இந்த ஜீவனா...

நீ இருப்பதால் தானே
நான் உயிருடன் உள்ளேன்
நீ சென்று விட்டால் நானோ
ஓன்றுமில்லை மூச்சே!
என்னுள் இருந்து திணற
வைக்காதே என்னையே...

ஈசனே நீ இங்கு பிறவி
எடுத்தாலும் இன்பமும்
துன்பமும் மாறி மாறி
வருமா உமக்கும் அந்த
சுழற்சியில் வேதனை
தெரியுமா என்றுமே
சுயநலத்தோடு வாழும்
வாழ்வு என்ன வாழ்வோ...
என்று முடியும் இந்த
வினை விதி தலையெழுத்து....

அவர் வருவார்
நல்வரம் தருவார்
மனதை மாற்றுவார்
நம்பிக்கைத் தருவார்
ஏற்றத்தில் புகழாரம்
பாடுவோர் பெறுவார்
என்றே எண்ணுகிறேன்

கால்களைப் பற்றிட
மன்னிப்பு கிடைத்திட
நன்மை நடந்திட
ஒழுக்கமாய் மாறிட
வியப்பை அளித்திட
மனம் மாறும் மனிதம்

உயிர் வாழ மட்டுமே
இத்தனை செய்கை
சரியா?தவறா?
என்ற எந்த சலனம்
இல்லையே....
பணம் வந்தால்
மாறிடும் மனம்
இந்த குணத்தை
சேர்த்து இழுத்து
சென்று விடுகிறது

பூமி என்ன செய்தது
மனிதனால்...
உருவாக்க முடியாத
இயற்கையை..
ஏன் ?அழிய வேண்டும்
நல்லது அல்லாதது
அழியட்டுமே...

Wednesday, December 2, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(7)......


தெளிவாக்க இயலுமோ
பெண் என்பவள்
புகுந்த வீட்டிற்கு

சென்றவுடன் பெரியதாய்
மாற்றம் அடைவது
பொறுப்பில் வந்ததா...
மனமாற்றத்தால் வருவதா...
இயல்பானதது தானோ...
சமுகத்தின் நியதியோ...



உள்மனதின் உயர்ந்தே
உறவுகள் இருக்கிறதே
உள்ளமதை புரிந்தே
உண்மைதனை உரைத்தே
உரிமையால் பெற வைத்தே
உங்கள் மனம் என்றுமே...
உள்மனம் இறைவனுக்கும்
நன்றி சொல்லுமே!