


கத்தின. என்று பாட்டி முடிக்க..இந்த கதையில் சிங்கம் எல்லாரையும்


குட்டி முயலைப் பாருங்கள்
சுறுசுறுப்பாய் ஓடுது!
குதித்து குதித்து ஓடுது
கூண்டுக்குள்ளே பதுங்குது
குட்டி குட்டி பற்களால்
புல்லைக் கொரித்து திண்ணுது
பசுமை படர்ந்த தரையிலே
பாய்ந்து பாய்ந்து ஓடுது..
ஆசிரியை செய்யும் செயல்களை அப்படியே பார்த்து செய்கிறாள் சந்தோஷினி.நேற்று அவள் கேட்ட கதை அவளுக்கு நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும் ஆசிரியை சொல்ல சொல்ல மாணவர்கள் சொல்லுகிறாகள்..சிலருக்கு சுறுசுறுப்பாய் என்ற வார்த்தை வரவில்லை. சு.சுப்பாய் என்றார்கள்.சொல்லி சொல்லி பார்க்கிறாள். பின்பு தாத்தா பள்ளி வாசலில் வந்து நிற்கிறார்.அவள் கண்கள் தேடுவது பாட்டியை...தா..த்..தா... என்று ஆவலாய் வருகிறாள்.தாத்தா குட்டிமாவை தூக்கி கொள்கிறார். குட்டிமா...நல்லா படிச்சிங்களா.. ம்..படிச்சேன் தாத்தா.. பாட்டி எங்க தாத்தா.. வீட்டில இருக்காங்க..சரி மிஸ்க்கு Thank youசொல்லிட்டியா.. போலாமா..என்றார். தாத்தாவோட பேசிக் கொண்டே வருகிறாள்.வீடு வந்ததும்...துள்ளிக் குதித்து பாட்டி...என அம்மாவை விட பாட்டியைத் தான் தேடுகிறாள்.
(தொடரும்)