Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, June 26, 2010

குட்டீஸ்(16)

குட்டிமா ......தூங்கி எழுந்து வந்து.....ஒன்றும் புரியாமல் பார்க்கிறாள்.
பாட்டி என்ன செய்றாங்க என கவனித்து கொண்டிருந்தாள். தூக்கம் கலைவதற்குள் அழகான முயலை கவுணில் பார்த்த சந்தோஷினிக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது..
அம்மா முயல் வரைச்சாங்கடா..என பாட்டி சொல்லுறாங்க.
அம்மாவை பார்க்கிறாள்...உள்ளிருந்து கையில குட்டிமாவிற்கு பாலை ஆத்தி எடுத்துக் கொண்டு வந்தாள்..அ..ம்மா..என குரல் கொடுக்கிறாள்...
இதுவா ஸ்கூல் விட்டு வந்து போட்டுக்கடா...நல்லா இருக்கா..முயலை பாரு நூலினால் பாட்டி தைச்சாங்க..என்றாள்.சரியா இருக்கா பார்ப்போமா டா..செல்லத்துக்கு.. என அவள் அணிந்திருந்த ஆடையை கழற்றிவிட்டு இந்த கவுணை மாட்டிவிட்டாள்..முயலை தடவி பார்த்த குட்டிமா நிமரவில்லை..இங்க பாருங்கடா..என லதா அழைக்கிறாள்..
சரி டா இன்னும் பின்னாடி சரி செய்திட்டு நாளைக்கு போட்டுக்கொள்ளலாம் என கழற்றிவிட..குட்டிமாவின் முகம் சிறயதாய் போகிறது.
உடனே பாட்டி இதுமட்டுமில்லடா..நளைக்கு கடைக்கு போய் பட்டுபாவடை வாங்குவோமா...
என்றதும் குட்டிமா பாட்டியிடம் வந்து நிற்கிறாள்.என்ன பாட்டி...நிஜமாவா..
ஆமாம் டா...உங்க சித்தப்பா உனக்கு ஒரு டிரஸ் வாங்க சொல்லி இருக்கிறான்..நாளைக்கு கடைக்கு போகி வாங்குவோமா என குட்டிமாவிடம் சொல்கிறாள் பாட்டி.
சித்தப்பா அப்பாவும் இருக்கிறது போல ஒரு படம் முன் முகப்பு அறையில் இருப்பதை அறிந்த அவள் அங்கு சென்று நிற்கிறாள்.
அவன் எங்கடா..வரவில்ல என ஏக்கமாக சொல்கிறாள் பாட்டி.
இம்முறையும் விடுமுறை இருந்தும் வேலை அதிகமாக இருக்கிறது என சொல்லுகிறான் என்றாள்.
அப்பாவும் வந்துவிட ஏன் என்னவாம் அவனுக்கு என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறார்.சரி போன் பண்ணிப் பார்க்கிறேன் என அழைப்பு விடுக்க மறுப்புறம் ஒன்றும் பதில் இல்லை.
இவன் ஏன் போன் எடுக்க மாட்டிகிறான் என திரும்பவும் அழைப்பு விடுக்க...ம் என எதாவது டிராபிக்ல மாட்டி இருப்பானோ..அப்பறம் செய்யலாம் என உள்ளே சென்றுவிட..
பாட்டியின் எதிர்ப்பார்ப்பு இளைய மகனும் அங்கு இல்லையே என்பது தான்.
கொஞ்சம் நேரம் கழித்து தாத்தா அருணிடம் தம்பியிடம் பேசினாயா என கேட்க...இல்லபா அவன் போன் எடுக்கல.இப்ப முயற்சித்து பார்க்கிறேன் என்றார்.
பின் அண்ணனிடம் பவ்யமாக வெளியில் இருப்பதாக தெரிவித்தான்.சரி நீ எப்போ வருகிறாய் என கேட்கிறார்...
இல நான் வரல..என்றவுடன் ஏன் டா நாங்க எல்லாம் இருக்கிறத மறந்திட்டியா என கேட்கிறார்...
எப்பவும் வேலை வேலை எதாவது சொல்லிட்டே இருக்கிற..
அப்பா அம்மா இங்க இருக்கிறாங்கடா..நீயும் வாடா..என அழைக்கிறார்.
மறுப்பு தெரிவிக்க முடியாமல் மௌனமாக இருந்தான் அண்ணனிடம்..
குட்டிமா இங்க வாடா..சித்தப்பாட்ட பேசுடா என அழைக்கிறார்.
குட்டிமா தன்னோட பாணியில சித்...தப்பா..என்றவுடன்..ஹொய் என்ன பண்ணுற கேட்கிறார்..



சரி நான் அங்க வரவா கேட்டார்...ம்...என்னவோ புரிந்தது போல தலையை ஆட்டி ஆட்டி பேசினாள் குட்டிமா...
பாட்டி கேட்டாங்க..சித்தப்பா என்னமா சொன்னான் என்று..
குட்டிமா கிட்டே வந்து......
(தொடரும்)

No comments:

Post a Comment