Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Thursday, October 20, 2016

நினைவலைகள் -1

மனித மனம்:- மனதை அடக்கலாமா? அடங்குமா?

மனித மனம்:-

மனதை அடக்கலாமா? அடங்குமா?
குரங்கிலிருந்து மனிதன் வந்ததாக கூறுகிறோம்….
ஆனால் இந்த மனம் என்பது குரங்கு போல ஒன்றிலிருந்து மற்றொன்று என தாவிக்கொண்டிருக்கிறது.
மனம் என்பது எண்ணங்களின் கூட்டு….
எண்ணங்கள் பல தோன்றும் போது அதற்கு அல்லது அந்த நேரம் விழிப்புணர்வு என்பது நமக்கு நன்கு உதவும்.
விழிப்புணர்வு என்பது ஒரு வகையில் ஆறாம் அறிவு என்னும் மனிதனுக்கே உரிய எது நல்லது எது கெட்டது என்ற ஓர் உணர்வு நம்முள்ளே இருக்கும் நாம் வளர்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் நாம் எடுக்கிறோம்,எடுத்தோம் இன்னும் மேலும் எடுப்போம்,
மனத்திற்கு வருவோம்….
மனம் நிதம் நிதம் ஒன்றோ அல்லது ஒன்று மேலோ எண்ணிக்கொண்டே இருக்கிறது…
நாம் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும்போது மற்றொன்றில் எண்ணத்தால் ஈடுபட்டிருக்கிறோம்….
அதனால் ஒருமுனைப்போடு ஒரு வேலையை நாம் செய்ய தவறிவிடுகிறோம்.
மனதை அடக்கவதோடு அதனை ஆசுவாசப்படுத்த முயன்றோன்மென்றால் மிக சிறந்த வழியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ஏனென்றால் நாம்
அடங்கி செல்ல தவிர்ப்போம்…
அடக்க முயன்றால் வெறுப்போம்..
எதற்கும் காலம் பதில் சொல்லும் என்பது உண்மையே…
ஒன்றின் மீது பற்றோடு இருந்த நாம் வேறொன்றின் மீது முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறோம்…
அந்த அந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதனையே செய்ய முனைகிறோம்…
மனம் ஓர் அற்புதம்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்ந்தால்
மனம் ஓர் ஆனந்தம்
உதாரணத்திற்கு ஒரு நிகழ்வு நடந்தால் அந்த நிகழ்வால் பாதிப்பு யாருக்கு சாதகம் யாருக்கு அடுத்த இடத்திலிருந்து ஒரு சில மணித்துளிகள் நாம் அந்த நிகழ்வில் தொடர்புள்ளவரின் இடந்த்தில் இருந்து யோசித்தால் நிச்சயமாக எல்லா நிகழ்வில் வெகுசுலபமாக மேலும் விழிப்பு நிலையில் முடிவுகள் சிறிது மாறுபடலாம்…..மனம் லேசாகும்…நிச்சயம் புரிதலில் ஒரு வித திர்ப்தி
மனம் போன போக்கில் ஓடவிட்டாலும் தன்னிலை அடைய எளிதில் உணர்ந்து வர இவ்வகை அணுகுமுறை உதவும்.
இன்று நன்கு பேசிக்கொண்டிருக்கும் அதே நபர் நம் எதிரியாக மாற மனவேதனையில் அங்கு நாம் கற்றுக்கொள்ளுகிற பாடம் தான் மனபக்குவம்.

அந்த பக்குவம் என்னும் படகில் ஏறி நீந்தி பிறவிப்பெருங்கடல் கடப்போம்.
வாழ்க வளத்துடன்...சுபதினம்..அன்பு நல்வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment