Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, August 5, 2016

ஞாபகமறதியின் வகைகள்:-

குறுக்கீடு:-
இந்த வார்த்தையே நமக்கு புரிந்திருக்கும்….பெரியவர்கள் பேசும் போதும் அடிக்கடி கூறுவார்கள்..குறுக்க பேசாதே….அது இந்த வகை மறதியை சார்ந்தது தான்……
இதில இரண்டு வகை சொல்லப்படுகிறது…
·         உயிப்பான தடைப்படுதல்,
·         போனவற்றை தடைபடுதல் ஆகும்.
உயிர்ப்பான தடைபடுதல்:-
புதுமையான விஷயம் ஆனால் பழைய ஞாபகம் என்று சொல்லலாம்….
உதாரணமாக நம் பழைய வீடை புதுசா மாற்றி அமைத்தாலும் அங்கு நடந்த பழைய விஷயங்கள் ஞாபகத்திற்கு வரும்…..
புது சிந்தனையில் பழையது குறுக்கீடு ஆவது தான் இந்த வகை மறதி…
போனவற்றை தடைபடுதல்:-
பழைய விஷயம் ஆனால் புது விஷயத்தோடு குறுக்கிடுவதை சொல்லலாம்…
இதற்கு உதாரணமாக கணினியில் உள்ள சாப்ட்வர் அப்டேட் பண்ணுவது இல்லையென்றால் அதீத அட்வான்ஸ் வெர்சனை பயன்படுத்தும் போது ஏற்படும் குறுக்கீடு தான் இந்த வகை மறதி…
இதனை தவர்க்க ஒப்பிட்டு பார்த்தலை தவிர்க்க வேண்டும்…
ஒப்பிடுவதால் எந்த பலனும் இல்லை குழப்பமும் ஆற்றாமையும் தான் மிஞ்சும் ஆகையால் நம் வளர்ச்சிக்கு ஒப்பிடுதல் தேவை ஆனால் அதே வளர்ச்சிக்கு குறுக்கீடாமல் தவிர்ப்பது நம் கையில் தான் உள்ளது…
குறுக்கீடே குற்றம்…. என உணர்வோம்
வாழ்வில் முன்னேறுவோம்…


சார்ந்து கோல்:-
எதையாவது நாம் சார்ந்து இருப்பது தான் இந்த சார்ந்து கோல்…
அதாவது நாம் பலமுறை பார்த்திருக்கலாம் மேடை பேச்சாளர் பலர் ….
ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டு பேசுவது…எவ்வளவு பெரிய பேச்சாளர் வெகுசிலர் கூட அந்த தாளை சார்ந்து இருப்பது….
இப்படி தாளோ…மின் சாதனங்களோ……என எதையாவது சார்ந்து இருப்பது பலரின் இயல்பு…..
இது ஏனென்றால் தான் சொல்ல வரும் கருத்தோ, பாடல் வரியோ மறந்துவிடுமோ என்ற எண்ணம் தான்..
கோடிக்கணக்கான விஷயங்களை நாம் தக்க வைத்து கொள்ளமுடியும் என நாம் முதலில் நமது மூளை,புத்தி,அறிவு,மனதால் நம்ப வேண்டும்.என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என தன்னம்பிக்கையாக பேச இயலும்…
ஆனால் ஞாபகமாக எல்லாவற்றையும் பேச உதவுவது சார்ந்து கோல்.
சின்ன சின்ன குழந்தைகள் ஞாபகமாக எல்லா வரிகளையும் மனதில் நிறுத்தி பாட இயலும்போது நம்மால் ஏன் முடியாது..மேலும் இந்த விஷயத்தில் நாம் யோசிக்க வேண்டியது என்னவென்றால் குழந்தை பாடலை கற்றுக்கொள்ளும் போது திரும்ப திரும்ப பாடி பழக பழக துல்லியமாக பாட வருகிறது என்பது தான்….
அதுபோல இந்த சார்ந்து கோலில் இருந்து விடுபட நாம் திரும்ப திரும்ப  ஞாபகபடுத்தி பார்த்து எதையுமே சார்ந்து இல்லாமல் இந்த வகைமறதியில் இருந்து வெளிவருவோம்.




நன்றி…சபதினம்……அன்பு நல்வாழ்த்துக்கள்………………………….

No comments:

Post a Comment