Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, July 6, 2016

வகுப்பு-3 நினைவாற்றல் வளர்த்து கொள்வது எப்படி?

மூளை சோர்வை தடுக்கும்:-
அன்றாடம் சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன.பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட கொடுக்க வேண்டும்.
ஊற வைத்த பாதாம் பருப்பு:-
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.
அக்ரூட்,திராட்சை:-
அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.அது போல வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மூளைக்கு சுறுசுறுப்பு:- 
நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒரு முறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது.இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு,தினமும் அரை தேக்கரண்டியை பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்த்தைகளும், பெரியவர்களும் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள்.
திப்பிலியை வல்லாரை சாற்றில் ஊற வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அள்வில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.பப்பாளிப்பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.
பசலைக்கீரை:-
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
நெல்லிக்காய்:-
மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும்.
சுப தினம் 
ரமலான் தின அன்பு நல்வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment