Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, August 5, 2016

வகுப்பு -6 ஞாபகமறதி என்பது என்ன?

ஞாபகம் என்பதோட நாம அடிக்கடி உபயோகப்படுத்துகிற ஒரு வார்த்தை ஞாபகமறதி என்பது தான்….. அதனால நாம் இப்பொழுது மறதி என்பதில் எத்தைனையோ வகை இருக்கிறது…….
அதில நாம முக்கியமாக, அடிப்படையாக சொல்லக்கூடிய ஒரு ஐந்து வகைகள் மட்டுமே நாம பார்க்க போகிறோம்…
சிதைவு
அடக்குமுறை
விலகல்
சார்ந்து கோல்
உயிர்ப்பான தடைபடுதல்àகுறுக்கீடு
போனவற்றை தடைபடுதல்à
இந்த மறதியின் வகைகளை நாம்
கற்பதன் மூலம் நாம் எந்த வகையை சேர்ந்து
இருக்கிறோம்,அதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை
அறிந்து வாழ்வின் மேன்மையோடு விழிப்புண்ர்வோடு
சிந்தித்து வாழ்வோம்
நன்றிசுபதினம் நல்வாழ்த்துக்கள்

சிறந்ததில் நம்பிக்கை வைத்து 
சிறப்புடன் வாழ வாழ்த்துகள்








சிதைவு:-
நமக்கு தேவையில்லை நாம் தூக்கி எரியக்கூடிய ஒரு சிதைவு  என்று சொல்லலாம்.நாம பயன்படுத்தாத பாதை என்று அர்த்தம் கொள்ளலாம்….
எப்பவுமே எந்த ஒரு விஷயமும் நம்முடைய பயன்பாட்டில் இருந்தால் அது நம் நினைவில் நிரந்தரமாக தங்கி விடுகிறது.அதனை பற்றி யாராவது நம்மை கேட்டால் உடனே நாம் வெகுசுலபமாக சொல்லி விடுகிறோம்.அதே விஷயம்
நம் பயன்பாட்டில் இருந்தாலும் ஒரு சில நாட்கள் கடந்ததால் அதனை தாண்டி நாம் வேறு ஒரு விஷயத்தில் பயணித்திருப்போம்..ஆகையால் அந்த விஷ்யம் இப்பொழுது பழைய விஷயம் ஆகிவிடுகிறது..எனினும் நமக்கு தேவை என்ற எண்ணம் மட்டுமுள்ளது..நம்ம ஸ்டோர் ரூம் போல…
நாம் துணிகளை அடுக்கி வைப்பது போல ஒன்று மேல் இன்னொன்று என விஷயத்தை அடுக்கி வைக்கிறோம்…அடியில் உள்ள ஒரு விஷயம் தேவைப்படும் போது நாம் திணறுகிறோம்.நம்மீதே நமக்கு ஒரு சில நேரங்களில் கோபம் வரதொடங்குகிறது…
இதனை தவிர்க்க நாம் அந்த துணியை எடுப்பது போல அடியில் இருப்பதை உருவினால் சிதைவு தானே ஒவ்வொன்றையும் எடுத்து வைத்துவிட்டு பின் அடியில் உள்ளதை எடுத்தால் நமக்கு சிதைவில்லாமல் கிடைக்கும்,இருந்தும் நேரவிரயம் ஆகலாம்..ஆகையால் எந்த விஷயமும் நாம் அப்ப அப்ப பயன்பாட்டில் வைத்திருந்தோம் என்றால் இச்சிதைவு ஏற்படாது காத்துக்கொள்ளலாம்.மேலும் குப்பை போல எல்லாவற்றையும் நம் மனதில் நிறுத்தி வைக்காமல் வீட்டை சுத்தம் செய்வது போல மனதை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்..
வீட்டில் ஓர் அறையை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கிறோம் என்றால் அங்கு ஒரு 10 நாள் சென்று பார்த்தால் எப்படி இருக்கும்…சிந்தித்து பாருங்கள்..
ஒரே தூசியும்…ஒட்டடையும் நிறைந்திருக்கும்…மனதை தெளிவாக வைக்காமல்
நம் மனதில் நாம் தேவையில்லாத விஷயங்களை போட்டு திணிப்பதால் நாம் மறதியில் தவிக்கிறோம்..
பயன்படுத்தாத பாதை என்றால் முட்செடிகளில் புல்லும் விளைந்து பாதையை மறைத்துவிடும் அதுபோல நம் நினைவை மறைப்பது சிதைவு…
இதனை சரி செய்ய நாம் அடிக்கடி நினைவில் வைத்திருப்பது..மேலும் மனிதன் நடமாடும் போது தான் வழிகளில் பாதை சரியாகும்..அது போல தேவையில்லாததை விட்டுவிட்டு தேவையுள்ளதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்வோம்.மனம் ஒரு குப்பைத்தொட்டி அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.சிதைவு ஏற்படுவதை தவிர்ப்போம்.
                     
நன்றி…சுபதினம்..நல்வாழ்த்துக்கள்…
சின்னவர் அப்ப அப்ப காணாமல் போய்விடுகிறார் அவரைதேடும் வேலையால் கொஞ்சம் தாமதம்…வரவில்லை..


No comments:

Post a Comment