Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, September 9, 2009

ஏனோ கோபம் வரவில்லை

தோழி வருவதில்லையே... ஏன்? என்று அம்மா கேட்கும் போது எழுத தோன்றி எழுதிய என் இரண்டாவது (கவிதை) எண்ணத்தின் எதார்த்தம் எழுத்து வடிவில்...
அம்மாவின் பாசம்
அப்பாவின் அக்கறை
ஒர் ஆசானாய்...
வழிகாட்டியாய்...
"உன்னால் முடியும்" என்று
தோழமையோடு
உதவியும் செய்வாய்...
ஊக்குவிப்பாய்...
நிதானம் காக்க சொல்வாய்
சிரிக்க வைப்பாய்...
எவ்வளவோ சின்ன சின்ன செல்ல சண்டைகள்..
எவ்வளவோ சமாதானங்கள்..
அனைவரிடம் பேச முடியாமல்
நின்றாலும்...
அனைத்தும் நட்பிடம் பகிந்தது
ஏராளம்........
கொஞ்சம் கொஞ்சமாக
பேசி பேசியே மலர்ந்த
நட்பு தான்...நன்றாக கடந்தது நாட்கள்....
என்னவோ பேச மறுக்கிறாய்(மறந்துவிடுகிறாய்)
நேரமின்மையோ
இல்லையென்றால்
ஒருவேளை வாழ்க்கைத்துணை
என்னும் தீராநட்பு வந்ததாலோ.........
ஏனோ கோபம் வரவில்லை
நட்பின் நிமித்தம்.

No comments:

Post a Comment