சமீபத்தில் ஒரு பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது
ஏன்? எதற்கு?செய்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து.
*கும்பாபிஷேகம் செய்யும் முன்பே யாகம் வளர்த்து அங்கு நிறைய கும்பத்தில் இருக்கும் நீரை கும்பாபிஷேகம் நாளன்று
கோபுரகலசத்திலும் மூலவருக்கும் (சாமிச்சிலை) அபிஷேகம் செய்வார்கள்.
*கோபுரத்தில் இருக்கும் கலச வடிவம் குறைந்தது மூன்று முதல் எட்டு பாகமாக இருக்கும் . அதில் வரகு அரிசியை போட்டு மூடிவைப்பார்களாம் அந்த காலத்தில் வெள்ளம் சூழ்ந்திடும் போது கோவிலில் தான் பாதுகாப்பிற்காக வைப்பார்களாம்.
*வரகு அரிசி வெள்ளை நிறத்தில் சிறியதாக இருக்குமாம்.எளிதில் பயிரிடகூடியதும் மற்றும் இடி மின்னல் கூட தாக்க முடியாதாம்.
அது ஏன் பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை என்ற சந்தேகம் வந்தது அதற்கும் விடை கிடைத்த்து.
சாமிச்சிலைக்கும் பூமிக்கும் நடுவே ஒரு சிவப்புசாந்து போல இருக்கும்.அதன் பெயர் அஷ்டபந்தகம் என்பதாம்.
அதற்கான காலளவு தான் பன்னிரண்டு வருடமாம்.
கோபுரத்தரிசனம் செய்தால் கோடி பாவங்கள் நீங்குமாம்.
கோபுரத்தரிசனம் ...
கோடிபாபவிமோசனம்...
அதனால் இப்படி ஒரு பழக்கம் இருந்திருக்கலாம்.
நல்ல விளக்கம் அளித்த திருகே.தங்கநடராஜ தீக்ஷிதர் என்கிற குமார் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு அனைவரும் தெரிந்து கொள்ள இங்கு பகிர்ந்துள்ளேன்.
கும்பாபிஷேகம் பற்றிய செய்தி மிக்க நன்று...
ReplyDeleteவாழ்த்துக்கள்... தெரியாத நிறைய பெயருக்கு தெரியப்படுத்தியதற்காக....