Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, December 5, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[6]

வாசி நீ
நல்லதை
மட்டுமே...
புரிந்து வாசி
மதிபெண்ணல்ல
வாசித்தால்...
வாழ்வின்
நிதர்சனம்...

ஆம் என்று சொல்வது
உண்மையை ஏற்பது
இல்லை என்று சொல்வது
உண்மை அல்லாதது என
எடுத்து கொள்வதே இல்லை
மறுப்பதும்,மீறுவதும்
என்பது உரைப்பது
ஏற்கக்கூடிய ஞாயமோ?

என்றும் தரிசனம்
கிடைக்க காத்து
வாழ்வின் இன்பம்
துன்பம் எல்லாம்
இறைவன் அளிக்கும்
நிதர்சனம் என்றே...

இன்று... என்பது
தான் நம்பிக்கை
என்று...என்பது
நம்பிக்கையின்மை
வாழ்க்கை என்ற
கையை நம்பிக்கை
என்ற கையில்....

அறிவேன் என்பது
நம்பிக்கையில் வருவது
அறிந்தவுடன் மறப்பது
அறியாமையா..
இயலாமையா...
அறிவில்லாததா...
இயல்பானதா...

முடிவதில்லை என்ற
எண்ணமில்லை என்பதே
வாழ்வின் சாதனைகளை
பல சாதிக்க இயலுமோ

No comments:

Post a Comment