Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, December 11, 2009

குட்டீஸ்...(9)


இப்போ அழைத்தது......அப்பாவின்......அப்பாவே தான்.."என்ன பத்து நிமிடமாக கைப்பேசியில் அழைத்தும் பதில் இல்லையே...மருமகளும் கைப்பேசி எடுக்காமல் இருப்பதால்... தொடர்ந்து அழைத்திருக்கிறார்" சந்தோஷினியின் தாத்தா...

"அப்பா...சொல்லுங்க பா"...என்றார் அருண்...
"என்ன பா எப்படி இருக்கிற"...என்று கேட்கிறார்...மகன் நலமாக இருக்க வேண்டும் என மந்தில் நினைத்துக் கொண்டே....

"நலமாக இருக்கிறேன் அப்பா..சந்தோஷினியிடம் விளையாடிக் கொண்டு..."
"ஒ அப்படியா...பேத்தி என்ன சொல்லுகிறாள்"....
"ஸ்கூல் சேர்த்தாச்சு பா..இன்றைக்கு தான் முதல் நாள் போக போகிறாள்..."
லதா எப்படி இருக்கிறாள் என நலம் விசாரிக்கிறார்..
பின் அம்மாவிடம் பேசுகிறார் அருண்....
அப்பா கேட்க்காமல் விட்டதை அம்மா கேட்கிறார்..
"ஏன் பா இவ்வளவு நேரம் போன் எடுக்க..."
"அதுவா..ஒன்றுமில்ல அம்மா...."
"சொல்லுப் பா..."என்று கேட்கிறாங்க...
அம்மாவிடம் சகஜமாக எல்லாவற்றையும் சொல்லும் அருண் சந்தோஷினியை காணாமல் தவித்ததை சொல்கிறார் அருண்...பின் அம்மா ஆறுதலாக நீயும் தான் இப்படி பலமுறை காணாமல் போகிவிடுவ....சாப்பிடும் போது உன்னை தேடி தேடி தான் கண்டுபிடிக்கணும்....சொல்லுறாங்க..
அருண் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகைத்து லதாவிடம் கொடுக்கிறார்..
லதா..கவலைப்படாத ம்மா என்று சொல்லி கைப்பேசியை வைத்து விடுகிறாள் பாட்டி..
என்னங்க நாம அங்க போயி பார்த்துவிட்டு வந்திடுவோம்...என்கிறாள் பாட்டி தாத்தாவிடம்...
மறுப்பேச்சு பேசாத தாத்தா சந்தோஷினியை பார்க்கும் ஆவலில் இருவரும் கிளம்புகிறார்கள்...

இங்கே சந்தோஷ்னியை ஸ்கூல் கிளம்ப தயார் செய்கிறாள் அம்மா லதா..
அருண் ரெடியானவுடன் மூன்று பேரும் சந்தோஷினியின் பள்ளிக்கு போகிறார்கள்..
முதல் முறை அல்லவா...சந்தோஷினி கிட்ட அம்மா இங்கே உட்கார்ந்திருக்கேன் குட்டிமா..நீங்க உள்ள போயி படிச்சுட்டு வா ம்மா என்றாள்...
ஒன்று அறியாதவளாய்..தலையாட்டினாள்...
உள்ளே செல்லும் அழகை இருவரும் பார்த்து ரசிக்கின்றனர்...

சின்ன சிட்டு ஒன்று
செல்ல சிட்டு தான்
பள்ளி செல்லும் அழகு
பார்த்து கொண்டே கண்கள்

ஆவலாய் உள்ளே செல்லும்
ஆனந்தத்தில்...குட்டிமாக்கூடவே
செல்கிறது அவர்களின் மனமும்....

(தொடரும்)

No comments:

Post a Comment