Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, December 28, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(4)

5]பாரபட்சம் பார்ப்பது எதனால்?

இதுக்கெல்லாம் காரணம் சொல்வதே பாரபட்சமானதுதான்...
ஏன்னா எனக்குப் பிடிக்காத காரணங்களைத் தானே இங்கே சொல்லுவேன்...

பாரம் - வெயிட்டேஜ்..
பட்சம் - பக்கம்

பாரபட்சம்.. வெயிட் உள்ள பக்கம் சார்ந்து நிற்பது..

எப்பவுமே அதைத்தான் செய்கிறோம். எதை நாம் பாரம் என்று எண்ணுகிறோமோ அந்தப் பக்கம் சாய்கிறோம்.

பாரபட்சம் பார்க்காம முடிவு எடுப்பது என்பது இயலாத காரியம்
6]குடுப்பத்திலும் பாரபட்சம் உண்டா என்பது பற்றி சொல்லுங்கள்.....
அதிகபட்ச பாரபட்சமே குடும்பத்தில்தானே இருக்கு...

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கிறோம் பேர்வழி என்று எல்லா விசயத்திலும் தன்னை தாழ்த்திக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுப்பது நல்ல குடும்பம்.

என் வேலை நடந்தால் சரி என விட்டேத்தியாக இருப்பது இன்னொரு வகைக் குடும்பம்.

மூடுக்கு ஏற்ப கொஞ்சுவதும் மிஞ்சுவதும் இன்னொரு வகைக் குடும்பம்..

நான் தான் முக்கியமான ஆள், நான் சொல்றதுதான் சரி என ஒவ்வொருவரும் வீம்பு பிடிப்பது இன்னொரு வகைக் குடும்பம்.

எப்படிப் பார்த்தாலும் குடும்பத்தில் நடுநிலைமை என்பதே மிகக் கடினமான ஒன்று.

No comments:

Post a Comment