Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, January 8, 2010

குட்டீஸ்...(11)

குட்டீஸ்...(11)
அப்போ அதற்குள்..அங்க.....ப்ரவீன் தன் தண்ணீர் குப்பியை கீழே போட்டுவிட்டான்....
அம்மா வீட்டில் கீழே போட்டால் அடிப்பாங்க என்பதால் அவன் பயத்தில் நின்று கொண்டிருந்தான்.
அம்மாவின் பாசத்தை இந்த முழுபாட்டில் தண்ணீர் என்பது போல ப்ரவீன் அம்மா கொடுத்தை தூக்க முடியாமல் தான் இச்சிறுவன் கீழே போட்டதை அறிந்து கொண்ட ஆசிரியை அவனிடம் வந்து சரி பரவால..நீ இப்படி வந்து நின்று கொள் என கூறிவிட்டு பின் அந்த குப்பியை எடுத்து இருந்த தண்ணீரை மூடியில் ஊற்றி கொடுத்து குடிக்க சொல்லுறாங்க...
பின் எல்லா மழலையையும் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக அமர வைக்கிறாங்க...
எல்லாரும் நாளைக்கு அழாம சமத்தா வரணும் சரியா..என்று ஆசிரியை மாணவர்களை பார்த்து சொல்லுறாங்க...
புரிந்தது போல சில பிள்ளைகள் தலையாட்டினார்கள்...
எல்லாரையும் கை தட்ட சொல்லி பின்பு இறைவழிபாடு செய்ய வைத்து வீட்டிற்கு செல்ல முதல் அறைக்கு அழைத்து வருகிறாங்க...

அந்த பள்ளியின் சிறப்பே ஒவ்வொரு வாசலிலும் ஒரு ஆசிரியை விதம் சின்ன சிறார் விழுந்து விட கூடாது என்பதால் வீட்டிற்கு செல்லும் போது வகுப்பு செல்லாத ஆசிரியைகள் தங்கள் அறையில் இருந்து வந்து வழி அனுப்ப வேண்டும்...
இதனால் பிள்ளைகள் மிக கவனமாக செல்லுவார்கள்...

வெளியில் சந்தோஷினியின் அம்மா ஆவலாக காத்திருக்கிறாள் மகள் வரிசையில் வருவதை காண்கிறாள்....
பின் சந்தோஷினி சிரித்து கொண்டே "அம்மா..... " என்றாள்...
குட்டிமா.....என்று சொல்லி கொண்டே பையை பார்க்கிறாள்...அவள் தான் வைத்த பழங்களை சாப்பிட்டாளா..என...
குட்டிமா ஆப்பிள் சாப்பிட்டீங்களா....
ம்.. சாப்பிட்டேன் அம்மா.அம்மா..அங்க பாருங்க.....அந்த மிஸ் தான் எங்க மிஸ் அம்மா..என்று தன் ஆசிரியை கைக் காட்டுகிறாள்...
பின் லதாவும் சந்தோஷினியும் வெளியே வந்தனர்...
குட்டிமாவை தூக்கி கொண்டாள் லதாம்மா..
பின் தன் வகுப்பறையில் பார்த்ததை சொல்லி கொண்டே வந்தாள்...
அம்மழலையில் பேச்சிலே வீடும் வந்து விட்டது...
அம்மா முன் கதவை திறந்து கீழே இறக்கி விட்டதும் துள்ளி செல்லுகிறாள் கதவின் அருகே...
அம்மா வாசலில் உள்ள கதவை சாத்திவிட்டு உள்ளே வருகிறாள்...
கதவை திறந்ததும் அம்மா அப்பா எப்போ வருவாங்க என்று கேட்கிறாள்....காதில் வாங்கது போலவே இருந்தாள் லதாம்மா...
குட்டிமா..வாங்க என்று சொல்லி கொண்டே....குளியல் அறையில் காலை கழுவ சொல்லுகிறாள்...முகம் கை கால்களை அலம்பி விடுகிறாள் அம்மா....
தண்ணியில் ஆடுவது என்றால் சந்தோஷினிக்கு ரொம்ப பிடிக்கும்....இப்போ வேண்டாம் வா...என்று அழைத்து கொண்டு உள்ளே சட்டையெல்லாம் மாற்றி விடுகிறாள்..
அப்பா எப்போ வருவாங்க என்று கேட்கிறாள்....திரும்பவும் குட்டிமா...

இப்போ வந்திருவாங்க செல்லம்.....இங்க விளையாண்ட்டு இருங்க..அம்மா போயி சமையல் செய்துவிட்டு வருகிறேன்....என்று சொல்லிவிட்டு சமையல் அறை நோக்கி செல்லுகிறாள்....

வண்ணமயமான அவளின் பந்தை வைத்து கொண்டு விளையாடினாள்...

அப்பா வந்து குட்டிமாவின் கண்ணை மூடுகிறார் பின் பக்கமாக வந்து...
குட்டிமா...அப்படியே அந்த கையை பிடித்து கொண்டு அப்பா என்று கத்தினாள்...

எப்படிடா தெரியும் அப்பா தான் கேட்கிறார் அருணப்பா....
அம்மா சொன்னாங்க...
சரி ஸ்கூல் பிடிச்சுருக்கா குட்டிமாக்கு என்றார்...
ம்...அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லுகிறார்....
லதா..இங்க வா...குட்டிமா பேசுறதை பார்க்காம அங்க என்ன பண்ணுற....
வழியெல்லாம் அவள் சொல்லி கேட்டதால் அவள் வேலை செய்து கொண்டு
மதிய உணவை எடுத்து மேஜையில் வைத்து கொண்டிருந்தாள்...

வாங்க வாங்க..அப்பாவும் பொன்னும் அப்பறம் பேசலாம் வந்து சாப்பிடுங்க....
என்று சொல்லிக் கொண்டே குட்டிமாவிற்கு பருப்பு சாதம் பிசைந்து வைக்கிறாள்...

குட்டிமா....சாப்பிடலாமா...என்று அருணப்பா தூக்கி கொண்டே மேஜை அருகே வருகிறார்...

லதாம்மா சாப்பாடு போட்டு கொண்டே குட்டிமாவிற்கு ஊட்டி விடுகிறாள்....
குட்டிமாவிடம் பேசிக் கொண்டே....குட்டிமா சமத்தா சாப்பிட்டாள்.
பின் அருண் குட்டிமாவை தூங்க வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு செல்லுகிறாள்....
லதாம்மா தானும் சாப்பிட்டு குட்டிமா தூங்கும் நேரத்தில் தன் வேலைகளை முடித்துவிட வேண்டும் என செய்து கொண்டிருக்கிறாள்....
குட்டிமா தூங்கி எழுதவுடன் சற்று ஒன்றும் அறியாதவளாய் அமர்ந்து இருந்தாள்...
பின் வெளியே வந்து அம்மாவை தேடுகிறாள்...
அம்மா மாவை சலித்து கொண்டிருந்தாள்..அம்மா நான் செய்றேன் மா..இல்ல குட்டிமா...கீழே சிந்திடும் என்று சொல்லுகிறாள் அம்மா
அப்படியே பார்த்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் வருகிறாள்....
அம்மா மடியிலும் அமர்ந்து கொள்கிறாள்...
அம்மாவின் கையை பிடித்து கொள்கிறாள்...அம்மா கை ஆட ஆட...தன் கையும் ஆடுவதை ரசிக்கிறாள்...
அம்மா நான் ..நான் என்று திரும்ப திரும்ப கேட்கிறாள்..லதாம்மா கிடு கிடுவென எல்லாவற்றிஅயும் முடித்து கடைசி தடவை மிக கொஞ்சம் இருப்பதை தருகிறாள்...ஆட்டி ஆட்டி கீழே மாவு வருவதை பார்த்து சிரித்து மகிழ்கிறாள்...
அம்மா என்ன குட்டிமா என அவள் மூக்கில் மாவு கையுடன் வைக்கிறாள்...
குட்டிமா மூக்கில மாவு....தடவியவுடன் குட்டிமாவும் அம்மாவின் மேலே தடவினாள்....சின்ன மழலையின் கைகள் தொட....ஆனந்தமாய் அணைத்து கொண்டாள்...
சரி போதும் குட்டிமா என்றாள்...நீங்க போங்க அங்க ஆல்பம் இருக்கிறது திறந்து பாருங்க.... அம்மா இதோ வந்து விடுகிறேன்...
என்று லதாம்மா சொல்லுகிறாள்...

குட்டிமா ஆவலோட வந்து பார்க்கிறாள்....

முதல் பக்கம் திறக்கிறாள்.....உள்ளே..
(தொடரும்)

2 comments:

  1. அண்ணாமலையான் அவர்களுக்கு நன்றிகள்...
    தொடரும் விரைவில்...

    ReplyDelete