Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, January 1, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(5)

7]விளம்பரங்கள் செய்வது என்பது நடந்த நிகழ்வை கண் முன் காட்டுவதால் பார்காதவர்கள் கேள்வி படட்டும் என்பதற்காகவா...
ஊனமுற்றோருக்கு சக்கரம் வண்டி கொடுத்தற்கு ஓர் விளம்பரம்.....பெருமிததிற்கு விளம்பரமா....
தானம் செய்வது தன்னிறைவு அடைய தானே....
பொருட்களின் விளம்பரம் விற்பதற்கு....
இந்த மாதிரி விளம்பரம் ..... அவர்களை காயப்படுத்தாதா?

விளம்பரம் செய்வது என்பது வெகுவும் பொதுப்படையான ஒன்று. பலருக்கும் ஒரு விஷயம் தெரியப்படுத்தப் பட வேண்டும் என்னும் பட்சத்தில் விளம்பரம் செய்கிறோம்.


1. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு இந்த இடத்தில் அளிக்கிறோம் என விளம்பரம் செய்கிறோம். இது நல்லது என சட்டென புரிவதால் இதைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை,

2. நாம் விற்க நினைக்கும் பொருட்களைப் பற்றியும் நமது தரம் மற்றும் வியாபார சம்மந்தமான விலை, சேவை போன்றவற்றையும் விளம்பரம் செய்கிறோம்.

3. தான் செய்யும் தான தருமங்களை விளம்பரப்படுத்தி சுய விளம்பரம் தேடுதல். இதை ஒருபக்கம் இருந்து பார்த்தால் இது வெறும் கௌரவத்திற்குச் செய்யப்படுவது போல தெரியும். இன்னொரு பக்கம் பார்த்தால் இது இன்னும் சிலரையும் தானம் தர்மம் செய்யத் தூண்டும்...


ஆக பொதுவாகவே விளம்பரத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளதோ அந்த அளவிற்கு விளம்பரம் நல்லதே!!!

விளம்பரங்கள் காயப்படுத்துவதில்லை. அதில் உள்ள பொய்கள்தான்...
8]பகவத்கீதை,குரான்,பைபிள் இவை மூன்றும் புனித நூல்,
இறையை அடைய வழி என்பதை தவிர வேறு ஒற்றுமை உள்ளதா?

நீங்க சொன்ன முதல் ஒற்றுமை - புனித நூல் - ஓகே
இரண்டாவது ஒற்றுமை - இறைவனை அடைய வழி - இது வந்து சுத்தி வளைச்சு ஓ.கே

பைபிள் என்பது உலகவரலாறு (கிறித்துவ வழிப்படி) எனச் சொல்லலாம். அதாவது நம்து பிரம்மாண்ட புராணம் மாதிரி. இறைவன் எப்படி உலகத்தைப் படைச்சார், மனிதனைப் படைச்சார், அப்புறம் என்னாச்சி? ஆதாமின் வரலாறிலிருந்து ஆரம்பிச்சு ஆப்ராகாம், டேவிட், மோசஸ், கிறிஸ்து இப்படிப் பலப் பல வரலாறுகளை உள்ளடக்கியது பைபிள்.

குரான் என்பது முகம்மது நபி வாயிலாக இறைவன் சொன்ன வாழ்வியல் தத்துவங்கள்

பகவத்கீதை என்பது இறைவனே நேராக வாழ்வின் தாத்பர்யத்தையும், மாயையையும், யோகமுறைகளையும், (இராஜ யோகம், ஞான யோகம், கர்மயோகம்) விளக்கி படைப்பின் அர்த்தங்களை விளக்குவதாக அமைந்தது..

அதாவது பைபிள் பலரால் எழுதப்பட்டது.. குரானைச் சொன்னவர் இறைவன் எழுதியவர் நபி... கீதையை நேரடியாக கண்ணனே சொல்லிவிடுகிறார்.

இவற்றின் மூலம் ஒவ்வொரு மதமும் எது நல்ல வாழ்க்கை என்பதையே விளக்குகின்றன. இறைவனுடன் கலப்பது என்பது கீதையில் மட்டுமே.. குரான் பைபிள் போன்றவற்றில் இறையாட்சியில் பங்கு பெறுவது மட்டுமே பேசப்படுகிறது.

ஒற்றுமை என வழியத் தேடிப்பார்த்தால் சில பல கருத்துகளில் தெரியும்.
ஆனால் அப்படி தேட வேண்டிய அவசியம் இல்லை..

9]தூக்கம் என்பதில் அனைவருமே ஒற்றுமை (இரவில்)தூங்குவது.. இது எப்பொழுதிலேந்து ,எங்கிருந்து தொடங்கியது

இரவில் தூங்குவது இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து, கண்ணை மூடுவதிலிருந்து தொடங்குகிறது..

பின்ன என்னங்க.. இதெல்லாம் பரிணாம வளர்ச்சி, மனிதனாக மனிதன் ஆவதற்கு முன்பிருந்தே இருக்கு.

நமது முக்கியமான புலன் கண். அதுக்குத் தேவை வெளிச்சம். அதனால வெளிச்சம் மிகவும் குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பது என்பது ஆதிகாலத்தில் இருந்தே இருக்கு.





2 comments:

  1. சரண்யா.,.

    உங்களின் எழுத்து வீச்சு அடுத்த தளத்தை எட்டி விட்டதாக அறிகிறேன்...

    நல்லா எழுதி இருக்கீங்க.... வாழ்த்துக்கள்...

    உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த இனிய 2010 வருட ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    என் புத்தாண்டு சிறப்பு பதிவுகளை இங்கே படியுங்கள்...

    சந்திரமுகி (ரீவைண்ட் 2005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் http://jokkiri.blogspot.com/2009/12/2005.html 2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-2.html

    ReplyDelete
  2. நன்றிகள் திரு கோபி அவர்களே....

    ReplyDelete