Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Thursday, January 28, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(9)

12]சுதந்திரம் அப்பறம் வந்த குடியுரிமை பத்தி சொல்லுங்க.....
எப்படி இது என்னுடையது நிலம் அது அவருடையது ......
என்றெல்லாம் பிரித்தார்கள்.....
யார் பிரித்தது....
அப்போ காசுக்கு பதிலா பண்ட மாற்றமுறை இருந்ததா சொல்லுவாங்க....எப்போ?....ஏன்?

சுதந்திரத்திற்கு பின்னால் வந்தக் குடியுரிமையா? சுதந்திரத்துக்கு முன்னாலயும் நமக்கு அதே குடியுரிமை இருந்ததுங்க. ஆனா அதை உள்ளூர் ஆட்சியாளர்கள் முழுமையாக அனுமதிக்க வில்லை அவ்வளவுதான். நமது குடியுரிமைச் சட்டம், இங்கிலாந்தின் குடியுரிமைச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டதால் பிரிட்டிஷ் பிரஜைகளாக இருந்தபோதும், இன்று இந்தியக் குடிமகனாக இருக்கும் பொழுதும் ஏறத்தாழ அதே உரிமைகள்தான். மாறியது அரசியல் உரிமைகள்தான்.. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் இப்படிச் சில விஷயங்கள் இந்தியாவைக் ஆட்சி செய்தவர்களால் கட்டுப்படுத்தப் பட்டன.

மனிதனின் ஆதிகாலத்தில் நாய் அல்லது புலி மாதிரிதான். ஒவ்வொரு குழுவும் தனக்குரிய எல்லையை அடையாளப்படுத்தி அங்கே வாழ்ந்தார்கள்.. வலிமை உள்ள குழு இடம் வேணும்னா மற்றக் குழுக்களில் ஆண்களைக் கொன்று, பெண்களை கைப்பற்றி இடங்களை கைப்பற்றினாங்க.

அப்புறம் நாகரீகம் வளர்ந்து விவசாயம் பெருக, குழுத்தலைவன் உத்தரவுப்படி நிலங்கள் உரிமையாக ஆரம்பித்தன.. குடும்ம்பங்களுக்கு நிலங்க்கள் உரிமையானாலும்,சும்மா கிடக்கறதை யாருக்கு வேணும்னாலும் குழுத் தலைவர் கொடுத்திடுவாரு.. ஒருத்தர்கிட்ட இருந்து பிடுங்கி இன்னொருத்தருக்கு கொடுத்திருவாரு..வரி வசூலிப்பது என்பது ஆற்றங்கரை நாகரீக காலத்திலிருந்தே இருக்கு.


இதுவே நாகரீகம் வளர்ந்து நாடுகள் உண்டானப்ப, குடும்ப அமைப்புகள் பலமானது.. பரம்பரை சொத்துகள் உருவானது அப்போதான். பரம்பரையா சொத்துகள் இருந்தாலும், இராஜா இந்த இடம் அரசனுக்குச் சொந்தம் அப்படின்னா கொடுத்திடனும். இராஜா எதையாவது குடுத்து சரிபண்ணிக்குவாரு.

இந்தக் காலங்களில் பண்டமாற்று இருந்தது. நான் அரிசி குடுத்தா நீ பருப்பைக் குடு.. பானை கொடுத்தா மாம்பழம் கொடு மாடு கொடுத்தா மனையைக் கொடு அப்படின்னு கன்னாபின்னான்னு இருந்தது அரசர்கள் காலத்தில் நெல் என்பது பொதுப்பணமாகி மத்ததெல்லாம் அதை வச்சி சொல்வாங்க. அதாவது 1 படி நெல்லுக்கு இத்தனை கத்திரிக்காய் இப்படி..

அதற்கு பின்னால்தான் அரசுகள் காசு அச்சடிக்க ஆரம்பித்தன (2000 வருஷத்துக்கு முன்னாடியே). சொத்துப் பத்திரங்கள் தாமிர பட்டயங்களில் எழுதப்பட ஆரம்பித்தன. நாடு முழுக்க அரசனுக்குச் சொந்தம். பட்டயம் இருந்தா மட்டும்தான் தனிமனுசன் அதை உரிமை கொண்டாடலாம். ஒவ்வொரு கிராமத்திலும் நிலப்பட்டய விவரம் சேகரிச்சு வச்சிருந்தாங்க.. வரி வசூலிக்க. நிலத்தை விக்கவோ யாருக்கோ தான தருமம் செய்யவோ அரசர் காலங்களில் உரிமை இருந்திச்சி...

வரிகள் கட்டப்படாத நிலம் அத்தனையும் அரசாங்கத்துக்குச் சொந்தமாயிடும்.

அப்பபோ அரசர் அளிக்கிற நன்கொடைகள் கூட பட்டயமாத்தான் தருவாங்க... இன்னிக்கு பட்டா கொடுங்க பட்டா கொடுங்கன்னு கேட்கிறாங்களே அது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கு,,

இன்றைக்கு இருக்கும் முறை பிரிட்டிஷ் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு முறைமைப் படுத்தப்பட்டு ஆவணக் காப்பீடு மூலம் நடத்தப்படுகிறது..

ஏன்னு கேட்டா என்னத்தைச் சொல்ல.. நதிக்கரை நாகரீகங்கள் வளர்ந்த காலத்தில் விவசாயம் செய்யக் கத்துகிட்டப்பவே, மனிதக் குழுக்களுக்கு நில உரிமை தேவைப் பட்ட்டிருக்கு.. நான் உழைச்சி பயிரிட்ட மாம்பழத்தை நீங்கச் திருடிகிட்டுப் போனா சண்டை, சண்டை ஒரே சண்டையா போயிடுமில்ல.. அதனால்தான்.

ஆக நிலங்களைச் சொந்தம் கொண்டாடுவது என்பது 5000 வருடங்களுக்கு மூன்னாலயே இருந்திருக்கு..

3 comments:

  1. //நிலங்களைச் சொந்தம் கொண்டாடுவது என்பது 5000 வருடங்களுக்கு மூன்னாலயே இருந்திருக்கு.. //

    யப்பா...... அம்புட்டு வருசமாவா???

    ReplyDelete
  2. ஆம்...
    ..நன்றி..
    அண்ணாமலையான் மற்றும் கோபி அவர்களுக்கு..

    ReplyDelete