Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, January 30, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(10)

13]உண்மையில் மனது கஷ்டப்படும்போது அழுகிறோம்...பின் அதை சமாளித்து வருகிறோம்...நம்மால் முடியுல என்ற இயலாமை வரும் போது நம்பிக்கையாக.....இதுவும் கடந்து போகும் என்று எண்ணுவதுண்டு...
நம்பிக்கையாக நாம் முன்னேற தெரிந்து வைத்திருக்கும் வேண்டுமென்பதை என்ன என்று கூறுங்கள்...


நம்பிக்கையுடன் முன்னேற நான்கு அம்சத் திட்டம், ஒரு சின்ன உதாரணத்துடன் சொல்கிறேன்..

1. திட்டமிடல்
2. மீள்பார்வை
3. ஓய்வு, புத்துணர்வு பெறுதல்
4. சாதித்த மனநிறைவு

திட்டமிடல்:

நான் எப்பொழுதும் நீண்ட காலத் திட்டமும், அதை அடைய குறுகிய காலத் திட்டங்களும் வைத்திருப்பது வழக்கம்.

உதாரணமாக ஈரோடு செல்ல வேண்டும் பெங்களூரிலிருந்து.. இது நீண்ட காலத் திட்டம்.. இரவு 11:00 மணிக்குள் ஈரோடு சென்று சேர வேண்டும்.

பயணத்தை சிறிய துண்டுகளாகப் பிரிப்பேன்

1. புறப்படும் நேரம் மாலை 5 மணிக்குள்
2. ஒசூர் அடைதல் - 6
3. கிருஷ்ணகிரி - 6:40
4. தருமபுரி - 7:30
5. இரவு உணவு - 7:30 லிருந்து 8:15
6. ஓமலூர் 9:00
7. சங்ககிரி 9:40
8. ஈரோடு 10:20

பாருங்க அங்கங்க தேவையான நேரம், அப்புறம் இடைவெளி எல்லாமே இருக்கு. ஆரம்பத்திலேயே மனசை இதற்கு தயார் படுத்திகிட்டோம்னா பிரச்சனை இல்லை. நிம்மதியா இருக்கும்.. அதாவது

1. எதை அடைய விழைகிறோம்?
2. அதற்கான வழிமுறைகள் என்னென்ன? அடைய வேண்டிய நிலைகள் என்னென்ன?
3. எப்போது அடைய விரும்புகிறோம் (கூடிய சீக்கிரம் என்றால் உடனே உங்க நிம்மதி பறி போயிடுச்சி அப்படின்னு வச்சுக்குங்க.. )
4. எந்தந்த இடங்களில், நிலைகளில், நேரங்களில் மீள்பார்வை (ரிவியூ) செய்யணும்

இந்த நாலும் ஆரம்பத்திலேயே தெரிஞ்சு காரியம் அல்லது தொழில் செய்ய ஆரம்பிச்சா நிம்மதியான வாழ்க்கை இருக்கும்


மீள்பார்வை :

அடுத்ததாக ஒவ்வொரு நிலையிலும் இந்தத் திட்டத்தை மீள் பார்வை செய்யணும். எப்படியா? இதோ இப்படி.


1. ஒரு செயல் முடிந்தவுடன் அதிலிருந்து "என்ன பாடங்களைக் கற்றோம்"அதாவது "Lessons Learned" மட்டும் தொகுத்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

2. "அடுத்து என்ன?" "What Next" என்று அடுத்த அடிக்கு உடனே தயாராகனும். ஏன்னா நடந்து முடிந்ததை இனி மாற்ற முடியாது. அதனால் அப்படி செஞ்சிருந்தா பரவாயில்லையே.. இப்படி நடந்திருக்கக் கூடாதா அப்படின்னு யோசிக்காம, அடுத்து அடியில் என்ன மாற்றம் செய்தால் சமாளிக்கலாம் என்பதை யொசிக்கணும்.

3. மனசு சோர்ந்து போகும் பொழுது இதுவரை சாதிச்சதை நினைங்க. உடம்பு சோர்ந்து போகும் பொழுது போக வேண்டிய தூரத்தை நினைங்க..

எங்கே பிரச்சனை என்றாலும் அதற்கு அடுத்த பகுதியில் எப்படி மாற்றம் செய்தால் இலக்கை அடையலாம் என்பது இப்போ எளிதாக விளங்கும்.

3. ஓய்வு - புத்துணர்வு பெறல்

உணவு, உறக்கம், உல்லாசம் ஆகிய ஓய்வு முறைகள் நம் உடம்பையும் மன்சையும் நீண்ட நாட்களுக்கு புத்துணர்வோட வச்சு, நம்ம செயல்திறமையை அதிகமாக்கும். அதனால் திட்டமிட்ட ஓய்வு முறைகள் கண்டிப்பா தேவை. எப்படின்னா மரத்தை வெட்டிகிட்டே இருந்தா கோடாரி மொக்கை ஆகிடும். அப்பப்ப தீட்டித் தீட்டித்தான் வெட்டணும். அதே மாதிரி முறையான உறக்கம், விடுமுறைகள், உணவு நேரங்கள் இவற்றை எல்லாம் எப்ப பார்த்தாலும் தியாகம் பண்ணிகிட்டே இருக்கக் கூடாது. இவையும் வேலையின் ஒரு பகுதின்னே வச்சுக்குங்க.. மிகப் பெரிய இழப்பு வரும் என்பதைத் தவிர மற்ற நேரங்களில் முடிந்த வரை இதையெல்லாம் தள்ளி வைக்க முயற்சிக்காதீங்க. இல்லைன்னா வெற்றிக் கோட்டை அடையும் பொழுது உங்களைத் தவிர மத்தவங்க எல்லாம் கொண்டாடிகிட்டு இருப்பாங்க..

4. சாதித்த மன நிறைவு


ஒரு பெரிய செயலை பல சின்ன செயல்களா பிரிச்சு செஞ்சோம் இல்லையா? இதில வெற்றிகளின் எண்ணிக்கை அதிகம். சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடுங்க. சின்னச் சின்னத் தோல்விகளை மேலே சொன்னமாதிரி அனுபவங்களை மட்டும் எடுத்துகிட்டு விட்டுடுங்க.

கடைசி இலக்கை எட்டியே ஆகணும் என்ற அழுத்தம் இல்லாம சின்னச் சின்னச் செயல்களாகச் செய்ததால் அதிக வெற்றிகள், சிறிய தோல்விகள், அதனால் மனசு ரொம்பவே தெம்பா இருக்கும். முடிவுத் தூரம் எப்பவும் கண்ணுக்கெதிரே இருந்ததால் இலக்கை கண்டிப்பா அடைவோம். காலம் மட்டும் கொஞ்சம் முன்ன பின்ன ஆகும்.


மற்றபடி, சின்ன தோல்விகளுக்கு அழுவதும், பெரிய கஷ்டங்களின் போது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. ஒரு கை பார்ப்போம் என்று எழுச்சி கொள்ளுவதும் உணர்ச்சி வசப்படுதல்கள் ஆகும். அப்படி இருந்தா நிம்மதி இருக்காது...


நம்பிக்கையோட, நிம்மதியா வாழ நான் மேலே சொன்ன வழி மிகவுமே உதவும்.

சுருக்கமாக,

எந்தச் செயலையுமே சிறு சிறு செயல்களாக, அளக்கக் கூடியதாக, குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட காரியங்களைச் செய்யணும் என்ற தெளிவோட, பிரித்து செய்தால் நிம்மதியாக வாழலாம்.

No comments:

Post a Comment