Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, January 16, 2010

குட்டீஸ்...(12)


முதல் பக்கம் பார்க்கிறாள்....அப்பா அம்மா ஒன்றாய் இருந்த படம்..அ..ப்...பா அ..ம்...மா.....என்று சொல்லுகிறாள்..
அடுத்த பக்கத்தில் தாத்தா...பாட்டி....என சொல்லிக் கொண்டிருக்கும் போது தாத்தாவும் பாட்டியும் நேரிலே வந்து விட்டனர்...குட்டிமா தாத்தா...என்று ஓடி செல்கிறாள்...
குட்டிமாவை தூக்கி கொள்கிறார் தாத்தா...
குட்டிமாவிற்காக வாங்கி வந்த சாக்லேட்டை பாட்டி கொடுக்கிறாங்க...
உள்ளே வந்து அமர்ந்த போது அம்மா இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள்.
பால் வந்தது.... அம்மா சமையல் அறைக்கு சென்று வேலையை பார்க்க தொடங்குகிறாள்..
அப்பா அருண் உள்ளே நுழைந்தவுடன் தன் அப்பாவும் அம்மாவும் வந்திருப்பதை பார்க்கும் போது சர்ப்ரைஸாக இருந்தது.சின்ன புன்சிரிப்புடன் இருவரையும் பார்க்கிறார்...

அப்பா இங்க பாருங்க..பாட்டி தந்த சாக்லேட் என்று குட்டிமா காமிக்கிறாள்...
அப்பா தன் மடியில் குட்டிமாவை உட்கார வைத்து கொண்டு இருவரிடமும் எப்போ வந்தீங்க..பயணம் எப்படி இருந்தது என்றெல்லாம் பேசி கொண்டிருந்தார்.

பாட்டி குட்டிமாவிற்கு தலைசீவி பூ வைத்து அழகு பார்க்கிறாள்..சின்ன முடி தான் இருந்தாலும் அதிலும் அழகை ரசிக்கிறாள் பாட்டியாக...

குட்டிமாவிற்கு சந்தோஷமாக இருந்தது .பாட்டி தாத்தாவிடம் புதுசா வாங்கின பேக்,புக்ஸ் எல்லாவற்றையும் காட்டி மகிழ்ந்தாள்.
அப்போ தாத்தா இங்க பாருங்க செல்லம்.... என்று புது டிரஸ்ஸை கொடுத்தாங்க....
ஸ்கூல் போகும் போது நாளைக்கு போட்டுட்டு போகலாம் என பாட்டி சொல்லுறாங்க...
குட்டிமா கிட்ட வந்து தொட்டு தொட்டு பார்க்கிறாள்...
குட்டிமா மகிழ்ச்சியாக இருந்தாள்...

மறுநாள் காலை புது டிரஸ் போட்டு கொள்வதால் சீக்கரமாக தூங்கி எழுந்தாள் குட்டிமா..
பள்ளி செல்லும் போது அழகாய் ஒரு குட்டி தேவதை போல இருந்தாள்...

நேற்று பள்ளியிலே இருந்த அம்மா இன்று குட்டிமாவிடம் குட்டிமா தாத்தா பாட்டி வந்திருக்காங்கல நான் வீட்டிற்கு போயிட்டு குட்டிமா ஸ்கூலைவிட்டு வரும் போது இங்க வந்திடுறேன் செல்லம்..அழாம உள்ள படிக்கணும் சரியா...
என்று சொல்லி விடுகிறாள் பள்ளியின் வாசலில்....

புது சட்டை போட்ட மகிழ்ச்சியில் அம்மா சொன்னதை காதில் வாங்காமலே சட்டையை பார்த்து கொண்டே தலையாட்டினாள்.
உள்ளே ஆசிரியை சந்தோஷினியை வந்து அமர சொன்னாங்க.
அடிப்படையில் பிள்ளைகள் அழக்கூடாது என்பதற்க்காகவே சின்ன சின்ன பாடல்களை சொல்லி தர ஆரம்பித்தார்கள்.
பின் அதிலும் தனித்திறமை வெளிப் படவேண்டும் என ஒவ்வொரு குழந்தையையும் பாட வைத்து செய்கையுடன் செய்ய வைப்பது வழக்கமாகியது.

அர்த்தமுடனோ...அர்த்தமில்லாமல் வெறும் ஒலிக்காகவோ என எல்லாம் சேர்ந்த கலவையாக தான் இருந்தது பாடல்கள்.
ரெயின் ரெயின் கோ அவே என்ற பாடல் வெளி நாட்டில் மழை பெய்த போது பாடியது.
அதனையும் இன்று மழை பெய்யாத போது பாடுவது ஒரு பயிற்சியாக கொண்டது
பள்ளியின் பாடத்திட்டம்.
அந்த பாடலையும் சொல்லி கொடுத்து தன் மாணவர்களை மதிப்பெண்கள் வாங்க வைக்க வேண்டிய கட்டாயம் என ஆசிரியைக்கு தோன்றியது.
அதில் சில நல்ல பாடலும் இருக்கும்.
அதில் ஒன்று சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.குப்பைகளை கீழே இருந்தால் அதனை அள்ள வேண்டும் என்று சொல்லி தர ஆசிரியை சுத்தமாக இருந்த வகுப்பில் சின்ன சின்ன தாள்களை கீழே போட்டு

Bits of paper.... bits of paper....
கீழே காமிச்சாங்க... சத்தத்தை கேட்ட மாணவர்கள் ஆசிரியையை பார்த்து கொண்டிருந்தனர்.
Lying on the floor..lying on the floor...
இரண்டு பக்கங்களும் கைகளால் கீழே காமிக்கிறாங்க....
Make the place untidy...Make the place untidy...
இந்த குப்பைகள் வகுப்பில் உள்ளதால் முஞ்சை சுளித்து கொண்டு ச்சீ என்பதை போல முகபாவனை காமிக்கிறாங்க...
Pick them up ......pick them up போட்ட தாள்களை திரும்ப எடுத்தாங்க...
Put it in the dustbin... put it in the dustbin மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் அதனை போட்டாங்க பாடிக்கொண்டே...

ஆனால் ஆசிரியை சில மாணவர்கள் சின்ன சின்ன தாள்களை கிழித்து கிழித்து போட்டு அதனை அள்ளிவிட வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதனை அறிந்ததால் பாடலின் விளக்கத்தை சொல்லி..... கீழே வழியில் பார்த்தால் அல்லது வீட்டிலும் எங்கும் குப்பைகளை பார்த்தாலும் அதனை எடுத்து குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும் என்று சொன்னாங்க.

பின் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு சில பிஸ்கட் கவர்,சாக்லேட் கவர் கீழே இருந்ததை பார்த்து திரும்பவும் இந்த பாடலை பாடினாங்க...சில மாணவர்கள் புரிந்துக் கொண்டு குப்பைகளை பாடிக்கொண்டே எடுக்க தொடங்கினர்...பழக்கத்தை மனதில் புகுத்தினாங்க...தேவையில்லாததை குப்பைத்தொட்டியில் போட வேண்டுமென அறிந்தார்கள்.

இந்த பழக்கம் வீட்டிலும் அவர்கள் கடைப்பிடிக்க தொடங்கினார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment