Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Thursday, January 21, 2010

குட்டீஸ்...(13)

இன்றும் குட்டிமாவும் ஸ்கூலில் நடந்ததை அம்மாவிடம் சொல்லிக் கொண்டே
வந்தாள்.

வீட்டிற்கு நுழைந்தவுடன் பாட்டியும் தாத்தாவையும் பார்த்ததில் ஆர்வமாக
சொல்லத் கொண்டிருந்தாள் அப்போதே பாட்டி சாப்பாடு ஊட்டி கொண்டிருக்க மழலையின் பேச்சில் இருவரும் அலாதியான மகிழ்ச்சியில் இருந்தனர்.

தாத்தாவுடன் பேத்தி அப்படியே தூங்கியும் விடுகிறாள்...
அம்மாவிற்கு உதவியாக பாட்டி சமையலுக்கு தேவைப்படும் சிலவற்றை செய்து கொடுக்கிறாங்க...
அப்பா அருண் வந்ததும் அனைவரும் வெளியில் செல்லலாம் என திட்டமிட்டாங்க..

பல நாட்களாக அலுவலகம் விட்டா வீடு,வீட்டிற்கு வந்தால் சந்தோஷினியுடன் சில நேரம்,அம்மா லதா எந்த வேலையையும் செய்ய சொல்லுவதில்லை.வீட்டிற்கு தேவையானதை அம்மா லதாவே வாங்கிக் கொள்வதால் அந்த வேலையும் இருப்பதில்லை.ஆக இப்படியே அவர்களின் நாட்கள் சென்று கொண்டிருந்தது.
ஏனென்றால் சந்தோஷினியை பார்க்கவே அவரிகளுக்கு நேரம் சரியாக இருந்தது.

அதனால் இன்று பாட்டியும் சேர்ந்து பார்த்ததால் வேலையும் முடிந்தது.
அனைவரும் அப்பா அருண் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் எப்படி கேட்பது...வேலை அதிகமாக இருந்திருந்தால் டையர்ட் ஆக இருக்குமே.. என யோசித்து கொண்டிருந்தனர்.பாட்டி கேட்டவுடன் சம்மதம் தெரிவித்தார்.பின்பு அங்கு இருக்கும் பெரிய கோவிலுக்கும்,கடற்க்கரைக்கும் மகிழ்ச்சியாக குட்டிமாவுடன் சென்று வந்தனர்.
குட்டிமாவும் சமத்தாக இருந்தாள். படுத்து தூங்கும் போது பாட்டியிடம் கதை சொல்ல சொல்லி கேட்கிறாள்.
பாட்டியும் கதை சொல்லுகிறாள்.....
ஒரு பெரிய காட்டில....நிறைய மரம்... செடி.. கொடிகள்,அப்பறம் நம்ம டி வி ல பார்ப்போமே என்ன சொல்லுமா என்று கேட்டாங்க...
புலி.....
ஆ....அப்பறம் என்ன பார்ப்போம்...
யான........ஆ யானை...அப்பறம் வேற என்ன பார்த்தோம்...
சிங்கம்.....ம்....
அந்த சிங்கம் தான்....எது பாட்டி என கேட்கிறாள்.
அவள் வைத்திருந்த புத்தகத்தில் இருந்த சிங்கத்தை எடுத்து காமிக்கிறாங்க..

பின் அந்த சிங்கம் அந்த காட்டில பெரிய ராஜாவாக இருந்தது.தினமும் அது
மத்த விலங்கு எல்லாம் இருக்குல அதுல ஏதாவது ஒன்ன பிடிச்சு அப்படியே புடிச்சு சாப்பிட்டிடும்....

இதனால பயந்த எல்லாரும் சோகமாக "உம்" ன்னு இருந்துச்சுங்க...என்ன பண்ணலாம்? எல்லாம் யோசனை பண்ணுச்சாம்...
அப்போ நரி சிங்கத்து கிட்ட போகி சிங்கராஜா....சிங்க ராஜா.....
யாரை எப்போ சாப்பிடுவீங்க ன்னு எங்களுக்கு தெரியல...
அதனால எல்லாரும் வெளிய வரவே பயமா இருக்குன்னு.....உம் ன்னு இருக்காங்க சொல்லுச்சாம்.....

ஒ..அதுவா...சரி நீங்களே உங்களில் யாராவது தினமும் என்னிடம் வந்திட்டீங்கன்னா நான் வெளிய வரல ன்னு சொல்லிடுச்சு...சிங்கம்
வெளிய வந்த நரி சொல்லுச்சாம் எப்படியும் ஒரு நாள் சாப்பிடத் தான் போகுது சிங்க ராஜா....

குட்டிமா அப்படியே பாட்டியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்...
தாத்தா காற்று வாங்க வெளியில் அமர்ந்திருந்தாங்க....
குட்டிமா என்ன் ஆச்சி பாட்டி சொல்லுங்க..கேட்கிறாள்..
அம்மாவும் படுக்க போறாங்க..அப்பா ஏதோ கணினியில பார்த்து கொண்டிருக்கிறார்...
வா மா....போயி தூங்கலாம் என சொல்ல...பாட்டியோட இருக்கிறேன் சொல்லிவிடுகிறாள்....
தாத்தா பாட்டியோட படுக்க செல்லுகிறாள்....
ம்...பாட்டி சொல்லுங்க....
சிங்கத்துக்கிட்ட மாட்டிகிறத விட தினமும் ஒருதர் அந்த குகையில் உணவாயிட்டா மத்த எல்லாரும் நிம்மதியாக இருக்கலாம் ன்னு சொல்லுது...

ஒரு ஒரு நாளும் ஒவ்வொருத்தவங்க போனும் சொல்லிடுது......
சரி இருக்கிற நாள் வரை இருப்போம் எல்லாம் நிம்மதியா இருப்போம்ன்னு எல்லாம் போயிடுச்சு...
ஆனால் முயல் மட்டும் நாம எப்படியாச்சம் தப்பிக்கணுமே யோசிச்சு கிட்டே இருந்துச்சு.....
ஒவ்வொரு நாளும் ஒரு விலங்கு போயிடும்....சிங்கம் அப்படியே புடிச்சு சாப்பிட்டிடும்....

அப்பொ ஒரு நாள் அந்த நரி இந்த முயல கூப்பிட வந்துசு....முயலுக்கு சோகமா இருந்ததால் அங்க இருக்கிற கிணறு கிட்ட உட்கார்ந்து நாம அந்த சிங்கத்துகிட்ட மாட்டிகிறத விட இந்த தண்ணி குதிச்சிடலாமான்னு யோசிச்சுது....எட்டி பார்த்த போது இந்த நரி..ஏய் முயல வா...வா.... போலாம்ன்னு சொல்லுச்சு....
இன்னிக்கு நீ தான்...ராஜா கிட்ட போனும்...
உடனே முயல் துள்ளி குதிச்சுகிட்டு ம்..போலாமேன்னு சொல்லுச்சு....
குட்டிமா இப்போ ஊத்து பார்க்கிறாள் பாட்டியை...அடுத்து பாட்டி என்ன சொல்ல போறாங்க என..பாட்டி கொஞ்சம் நேரம் நிறுத்தினாங்க..
பாட்டி ...ம்...என்ன ஆச்சு ன்னு குட்டிமா கேட்கிறாள்....
எல்லா விலங்கு சோகமா வரும் இந்த முயல் மட்டும் சந்தோஷமா வருதேன்னு நரி நினைச்சுது....
(தொடரும்)

No comments:

Post a Comment