Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Thursday, January 7, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(6)



9]பொங்கல் வருவதால் பொங்கல் பற்றி விளக்கமாக சொல்லுங்க....

போகி அன்று பழையது அழித்து விடுவது
பொங்கல் அன்று சூரிய பகவானை வழிப்படுவது

மாட்டு பொங்கல் அன்று கோமாதாவிற்கு படைப்பது
கரிநாள் அன்று விளையாடி மகிழ்வார்கள் என்பது தானா...இன்னும் தகவல் இருந்தால் சொல்லுங்க....தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்பதால் இதனை விமர்சையாக கொண்டாடுகிறோமா...உழவர்கள் நெல் அறுவடை செய்து தங்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நன்றி செலுத்துவதா..

கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்போம். மார்கழி மாதம் - இறை வழிபாட்டு மாதம் என்று சொல்வார்கள். வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என்ற இரண்டும் அந்த மாதத்தில்தான் வரும். திருப்பாவை நோன்பு,

திருவெம்பாவை நோன்பு என்ற இரண்டும் அந்த மாதம்தான்.


கார்த்திகை - மார்கழி மாதம்தான் ஐயப்பன் நோன்பும்...
மாதங்களில் நான் மார்கழியாக இருக்
கிறேன் என்கிறார் கண்ணன்.. மார்கழி மாதம் தெய்வ வழிபாடு தவிர திருமணம்,

காதுகுத்தல் போன்ற இல்ல விழாக்கள் செய்ய மாட்டார்கள். காரணம், மார்கழி என்பது அறுவடைக் காலம். விளைந்ததை பாடுபட்டு விளைய வைத்தது, சேதமின்றி காத்து வீடு சேர்க்க வேண்டும்.
நம்நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு.

விவசாயம்தான் நம் நாட்டின் வளத்தின் அடிப்படையாகக் கொண்டது.
ஆனி மாதம் உழுது
,

ஆடியில் விதைத்து, மார்கழி இறுதியில் அறுவடை என்னும் ஒரு போகச் சாகுபடிதான் அந்தக்கால நெல்லுக்கு.
சூரியனின் பாதைக்கும், இந்தச் சுழற்சிக்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு.

சூரியன் மாதம் ஒரு ராசி மண்டலத்தில் பிரகாசிக்கிறான். தை மாதம் சூரியன் மகர ராசி மண்டலத்தில் இருக்கிறான்.


நமது நாடு பூமியின் வடபாதியில் இருப்பதால் சூரியன் உக்கிரம் தணிந்து இருக்கும் காலம் இது. மகரரேகை என்று அட்ச ரேகைக்கு
பெயர் வைக்கக் காரணம் இதுதான். சூரியன் மகரராசியில் இருக்கும் பொழுது அவனது கதிர்கள் செங்குத்தாக படும் பாதை மகரரேகை. அதே போல்தான் கடக ராசியில் சூரியன் இருக்கும் பொழுது கடக ரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும். சூரியனே உழவர்களுக்கு முழுமுதற்கடவுள்.

சூரியனின் இயக்கத்தை ஒட்டியே அவர்களுக்கு வாழ்க்கை அமைகிறது.
சூரியன் கடக
ராசியில் பிரவேசிக்கும் பொழுது விதைப்பு தொடங்குகிறது. இதுதான் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலம்.

கடகரேகையிலிருந்து மகரரேகைக்கு சூரியப்பாதை செல்லும் காலம் உழவர்களின் வாழ்க்கையில் முக்கியமான காலம். இது தட்சிணாயனம் என வழங்கப்படும். எந்த காரியம் என்றாலும் உத்திராயணத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லும் இந்து மதம்,

தட்சிணாயனம் என்னும் இந்த ஆறு மாத காலத்தை உழவிற்காக ஒதுக்கி வை
த்துள்ளது. விவசாயம் செய்யும் காலத்தில் கவனச் சிதறல் கூடாது என்பதே இதன் அடிப்படையாகும். ஆறுமாதகாலம் உழவுத் தொழிலைக் கண்ணும் கருத்துமாகச் செய்து அதன் பலனான விளைச்சல் அறுவடையாகி தானியமாகி விட்டது.

ஆறு மாத கால இந்த தவத்தை நாம் நம் அலுவலகத்தில் புராஜக்டுகள் முடிந்த பின் வெற்றி விழா கொண்டாடுகிறோமே அது போல கொண்டாடும் முகமாக அமைந்ததே பொங்கல் விழா / அ
றுவடைத் திருவிழா / உழவர் திருவிழா என அமைந்த இந்த விழாக் கொண்டாட்டம்.

ஒரு பணியில் உதவியவர்களுக்கு பணி முடிந்த பின் எதையாவது பரிசளித்து நன்றி பாராட்டுகிறோமே அதைப் போன்ற ஒரு பண்டிகை. இதனுடன் தமிழனின் வாழ்க்கைத் தத்துவம் பின்னிப் பிணைந்து விட்டது. உணவு வளமே ஒரு நாட்டின் உண்மை வளமாகும்.

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் போகிப் பண்டிகை..

போகி என்பதை போக்கி என்பார்கள் சிலர். அதா
வது பழையவற்றைப் போக்குதல். வீட்டைச் சுத்தப்படுத்தி தேவையற்ற / உபயோகமில்லாதவற்றை எரித்து, அறுவடையான தானியம் சுத்தமான வீட்டிற்கு கொண்டு வருதல் என்பதாகும் இன்னும் மூன்று வித்தியாசமான வழிகளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

1. போகிப்பண்டிகை அன்று கூடி அழுது ஒப்பாரி வைக்கும் பழக்கம் சிலரிடையே இருக்கிறது. ஏனென்று ஆராய்ந்தால் அது புத்தர் இறந்த நினைவு நாள் என்கிற தகவல் இருக்கிறது. புத்தரா பீஷ்மரா என்பதில்
எனக்கு மாற்று கருத்து உண்டு. அம்புப் படுக்கையில் உயிரை நிஜமாகவே கையில் பிடித்துக் கொண்டு படுத்திருக்கும் பீஷ்மர் தன் உயிரை விடும் நாள் தை 1 ஆகும். பாரத யுத்தம் முடிந்தும், தர்மன் பட்டாபிசேகம் முடிந்து விஷ்ணு சகஸ்ரநாமம் எழுதினார். (இப்போ தெரியுதா ஏன் கண்ணனுக்கு மார்கழி மாதம் அவ்வளவு பிடித்தமானது என்று?) தர்மனுக்கு அரசியல் தர்மம் சொல்லிக் கொடுத்தார்.

2. போகிப் பண்டிகையை சங்கராந்தி என்று சொல்வார்கள். சங்கராந்தி என்ற ஒரு தேவதை உண்டென்றும் அவள் சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் காலத்தில் உலகத்தோர் அனைவரின் வீட்டிற்கும் வந்து செல்வாள் என்ற நம்பி
க்கை உண்டு. அந்த தேவதை வந்து சென்ற கோலத்தைப் பொருத்தே பஞ்சாங்க கணிப்புகள் இறுதி செய்யப்படுகின்றன. என்ன வாகனம், எத்தனை முகம், என்ன உண்டாள், எந்த திசை நோக்கிச் சென்றாள் என்பதைப் பொருத்து அந்த வருட பலன்கள் உறுதி செய்யப் படும். மகர சங்கராந்தி முடியாமல் பஞ்சாங்கங்கள் வெளியிடப் படுவதில்லை. (இதனால் அடுத்த ஆண்டு சுப காரியங்கள் செய்ய நாள் குறிக்க தை வரை காத்திருக்க வேண்டியது இருக்கிறது) பூளைப் பூ, வேப்பிலை மற்றும் ஆவாரம் பூ தோரணம் கட்டி வீடுகளை அலங்கரிப்பதும், மொச்சை அவரை எனப்படும் அவரையை வேகவைத்து, சங்கராந்தி தேவதைக்கு நிவேதனம் செய்து உண்பதும் இந்த வழிபாட்டிற்காகவே ஆகும்.



3. போகி என்றால் இந்திரன். மஹாபாரத காலத்தில் உழவர்கள் மழை மேகங்களுக்கு அதிபதியான இந்திரனுக்கே விழாக்கள் எடுத்தனர். கோவர்த்தன கிரியையும், மாடுகளையும் வணங்கச் சொன்னான் கிருஷ்ணன். இதனால் இந்திரன் கோபம் கொண்டு அடை மழை பெய்விக்க கோவர்த்தன கிரியை சுண்டுவிரலால் குடையாய் தூக்கி மக்களைக் கிருஷ்ணன் காத்தான். அதன் பின் இந்திரன் விஷ்ணுவே கிருஷ்ணன் என உணர்ந்து மன்னிப்பு வேண்ட, இந்திர விழா அறுவிடை திருநாளாக மாறியது. முதல் நாள் இந்திரனாகிய போகிக்கான திருவிழா எனவும், இரண்டாம் நாள் இயற்கைக்கும், மூன்றாம் நாள் கால்நடைகளுக்குமான வழிபாடாய் மாறியது என்பார்கள்


இரண்டாம் நாள் பொங்கல்.


இதைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும். அனைவருக்கும் அடுத்த ஒரு வருட காலத்திற்கு தானியம் கிடைத்து விட்டது. அரசாங்கத்திற்கோ வரி கிடைத்து விட்டது. ஏனைய தொழில் செய்வோரும் இதே காலத்தில் தங்களுடைய பாக்கிக்கான வசூல் கிடைத்து விட்டது. எனவே அனைவரும் சேர்ந்து நல்ல பருவங்களைக் கொடுத்த சூரியனுக்கு நன்றி சொல்லி வணங்கி அடுத்த ஆண்டின் நலனுக்காக பிரார்த்திப்பது பொங்கல்.
பார்த்தீர்கள் அல்லவா? உழவனுக்கு பணி செய்யும் தொழிலாளிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏன் அரசாங்கத்திற்கு வரியும் தைமாதம் தான் கிடைக்கிறது. எனவே அனைவருக்கும் இதைப் பொருத்துதான் அடுத்த வருட வாழ்க்கையே அமைந்திருக்கிறது. எனவேதான் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவன் மொழியும் உருவானது. அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வழக்காகிப் போனது.


மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கு விழா எடுத்துச் சிறப்பித்தல் ஆகும்.

எல்லோருக்கும் நன்றி சொல்லியாச்சி. கையில ஏகப்பட்ட தானியம் இருக்கு. ஆறு மாசம் பெரிய வேலைகள் இல்லை. விழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும் காலம். அதனால் காணும் பொங்கலன்று விளையாட்டுகள் அரங்கேறுகின்றன. (மாடு முட்டி காயமானா கூட ஆறு மாசம் இருக்கே தேறி வர)

ஜல்லிக் கட்டு தான் புகழ்பெற்றது என்றாலும் இன்னும் பல வீரவிளையாட்டுகளும் விளையாடப்பட்டன, சென்னை போன்ற நகரப் பகுதிகளில் காணும் பொங்கலன்று எங்கேயாவது புது இடம் சென்று கண்டு வரும் "காணும் பொங்கலாக" மாற்றி விட்டார்கள். அன்னிக்குப் பார்த்தீங்கன்னா சுற்றுலாத் தலங்களில் அவ்வளவு கூட்டம் இருக்கும்.

ஆக..

தை பிறந்தால் தான் அடுத்த வருட தானியச் சேமிப்பு.
தை பிறந்தால் தான் அடுத்த வருட பஞ்சாங்கமே பிறப்பு.

இப்படி தை மாதம் வாழ்க்கையின் ஆரம்பமாக தமிழனுக்கு இருப்பதால்தான்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்கிறோம்.


No comments:

Post a Comment