Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Sunday, January 17, 2010

பதில் கிடைத்த சில கேள்விகள்...(8)

சொர்க்கவாசல் நடை திறப்பு மற்றும் கண்ணாடி வாசல் திறப்பு இதனை பற்றி சொல்லுங்க...இவ்விரண்டிற்கும் என்ன வித்தியாசம்...
விரதம் பற்றி பத்ம புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கு..

இதைப் பற்றி ஒரே கதையைப் பல இடங்களில் படிச்சிருக்கேன்.. (வார்த்தை மாறாமல்)

பத புராணத்தில் சொல்லப் பட்டதை மிக விரிவாக எழுதி இருக்கிறார்.
உ.வெ,பெருகரணை சுவாமிகள் என்பபவர்.
அதை இங்கே கிளிக் செய்யவும்.

சொர்க்க வாசல் திறப்பு என்பது ஒரு குறியீட்டு விழா.

அன்று வைகுண்டப் பதவியை அனைவரும் அடைய வேண்டும் என்றச் சிந்தனையோடு முழுதான விரதம் இருந்தால் வைகுண்ட வாசல் அவருக்குத் திறந்தே இருக்கும் என்று சொல்வதை குறிப்பாக உணர்த்தத் தான் சொர்க்க வாசல் திறப்பு நடத்தப்படுகிறது.




பரமபத விளையாட்டும் இதையொட்டியே அமைகிறது. அதோட பெருமையை எனக்கு வேலையே வைக்காமல் இங்கே கிளிக் செய்யவும்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. நல்வழி திரும்பினால் நற்கதி உனக்கு உண்டு என்பதன அடையாளமாகவே விரதங்கள், பாப விமோசனங்கள், பரிகாரங்கள் ஆகியவை அமைகின்றன. வைகுண்ட வாசல் அனைவருக்கும் திறந்திருக்கிறது. நல் சிந்தனையும் நல்ல வாழ்க்கையும் மட்டும்தான் தேவை என்பதை உணர்த்தவே சொர்க்க வாசல் திறப்பு நடை பெறுகிறது.

இந்தச் சொர்க்க வாசல் பெருமாள் கோவில்களில் மூலஸ்தானத்திற்கு வடக்கு திசையில் அமைக்கப்படும்.

சொர்க்க வாசல் வழியாக பகவான் வெளியே வருகிறார்.. நாமும் அவருடன் வெளியே வருகிறோம். அதன் வழியாக வெளியே வரும் பெருமாள் கோவில் பிராகரத்தில் எழுந்தருள்வது, உனக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துகிறார்.


பல கோவில்களில் சொர்க்க வாசல் வழியா உள்ளே போய் மூலஸ்தான இறைவனை தரிசிக்கலாம். சில பெரிய கோவில்களில் அப்படி இல்லை.. பரமபத வாசல் வழியா நம்மளை வெளிய அனுப்பறாங்க.

நாமும் மூல்ஸ்தான இறைவனை தரிசித்து விட்டு பரமபத வாசல் வழியே வெளியே வந்து உற்சவ மூர்த்தியை தரிசிக்கிறோம்.. (அப்போ நாம் வைகுண்டத்துக்குப் போகலியா என எண்ணம் எழுவதை தவிர்க்க முடியாது)

கண்ணாடி மாளிகை திறப்பு என்பதற்கு தனியாக நாட்கள் இருப்பதாக எண்ணினாலும் ஆனால் அப்படி இல்லை. சேலம் கோடை பெருமாள் கோவிலில் கண்ணாடி மாளிகை அனுதினமும் திறந்தேதான் இருக்கிறது..

காணும் அத்தனையிலும் நானே இருக்கிறேன் அப்படின்னு கீதையில் கண்ணன் சொன்னபடி, எண்ணிலடங்கா இறை திருவுருவங்களை காட்டி விசுவரூபம் என்பது எப்படி இருக்கும் என்பதை சின்ன சாம்பிள் காட்டுவது போன்றது கண்ணாடி மாளிகை.

கண்ணாடி மாளிகையில் நடுவில் பெருமாள் எழுந்தருள, அனைத்துப் பக்கங்களிலும் கண்ணாடியால் வேயப்பட்டிருக்கும். இதனால் திரும்பும் திசையெல்லாம் இறைவனும் நாமும் தெரிவோம்..

கண்ணாடி மாளிகை தரிசனம் என்பது விஸ்வரூப தரிசனத்திற்கு ஒப்பானதாகும்

இது பெருமாள் கோவிலுக்கு மட்டுமே உரித்தானதல்ல.. சில சிவன் கோவில்களிலும் (சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் கோவிலில் நடராஜர் கண்ணாடி மாளிகையில் இருக்கிறார்)

எல்லாவற்றையும் சடங்குகளாக்கி ஏன் எதற்கு எப்படி அப்படின்னு தெரியாமல் செய்வதை விட

புரிந்து செய்தால் அந்த அனுபவம் தனிதான். கண்ணாடி மாளிகை அடுத்த முறை செல்லும் பொழுது இதுதான் அர்ச்சுனனுக்கும், கர்ணனுக்கும் பீஷ்மருக்கும், யசோதைக்கும் கண்ணன் காட்டிய விசுவரூபம் என எண்ணிப் பாருங்க புரியும்.

நன்றிகள்:தாமரை செல்வன் அவர்கள்[தமிழ் மன்றம்]

1 comment:

  1. //வைகுண்டப் பதவியை அனைவரும் அடைய வேண்டும் என்றச் சிந்தனையோடு முழுதான விரதம் இருந்தால் வைகுண்ட வாசல் அவருக்குத் திறந்தே இருக்கும் என்று சொல்வதை குறிப்பாக உணர்த்தத் தான் சொர்க்க வாசல் திறப்பு நடத்தப்படுகிறது.//

    மிக மிக அருமையான விளக்கம் சரண்யா...

    ReplyDelete