
குட்டிமா... அங்க..கட்டிலின் அடியில்....தன்னுடைய வண்ணமயமான பந்து உருண்டோடுயது..... அங்க லதாம்மா காலி அட்டைப் பெட்டிகளை வைத்திருந்தார்கள்...
அதில பந்து உள்ளே சிக்கி கொண்டது...குட்டிமா கட்டில் அடியில் செல்லும் போது வேற ஒரு பெட்டியில் குட்டிமாவோட கால் பட்டதில் பின் பக்கமாக அந்த பெட்டி குட்டிமாவை மறைத்ததால் அப்பா அருண் தேடும் போதும் அவள் அப்பாவின் கண்ணில் படவில்லை....அவள் இவர்களின் குரல்களை கேட்டும் பந்து எடுக்கும் ஆவலில் உள்ளே கையை நீட்டிக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள்...வண்ணங்களில் மனம் சென்றது குட்டிமாவிற்கு....
அப்பா...."எங்க போகி இருப்பா?"...என்ற யோசனையில் இருக்கிறார்...
அம்மா..."பெற்றவளாச்சே....அப்படியே காணாத சந்தோஷினியை நினைத்து அறையின் வெளிச்சுவரில் சாய்ந்து உட்கார்கிறாள்".
பந்தை முயற்சித்து எடுக்க முடியாத குட்டிமா..இப்போ உள்ளே சிக்கியவுடன் அம்மா....என்று குரல் கொடுக்கிறாள்....
அவ்வளவே...லதாவின் கண்கள் பளிச்சிட்டது...
ஓடோடிதேடுகிறாள்..என்னங்க...பாருங்க..எங்க.... "குட்டிமா.... எங்கடா இருக்க..."என்று ஆவலாய் கேட்கிறாள்.
என்ன பார்த்தாய்..நீ என கேட்கிறார் அருண்....
நீங்களும் தானே பார்த்தீங்க...என சொல்ல முடியுமா...அமைதியாய் இருந்தாள்..குட்டிமா என்பது மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது....
பின் அவளை அட்டை பெட்டிகளில் இருந்து விடுவித்த அப்பா அம்மா இருவரும் குட்டிமாவை அணைத்து கொஞ்சுகின்றனர்...தேடி அலைந்த சில நிமிடங்கள் எனினும் குட்டிமா...கிடைத்த சந்தோஷத்தில் பஞ்சாய் பறந்தது...
லதாம்மா....."உன்னை யாரு இங்கெல்லாம் போக சொன்னா.."எனக் கத்த தொடங்குகிறாள்..குட்டிமாவிடம்...
அதற்கு... "சரி விடு" என்று அப்பா சொல்கிறார்...
அப்பா..அப்ப அப்ப..இப்படி சந்தோஷினிக்கு சப்போர்ட் பண்ணுவதால் அவளின் மனதில் பெரிதும் இடம் பிடித்து விடுகிறார் அருண்.
இவளை தேடியதால் நேரம் சென்றது..என புலம்பிக்கொண்டே தன் வேலையை தொடங்குகிறாள்....எனினும் மனதில் எல்லா இறைவனுக்கும் நன்றி சொல்லுகிறாள்....
லதா தன் கண்வரிடம் என்னங்க....நாம இன்றைக்கு கோவில் சென்றுவிட்டு வந்திடலாம் என்கிறாள்...
ம் ..ம்...என்று சொல்லிக்கொண்டே குட்டிமாவை தூக்கி விளையாடுகிறார்...
சரி போங்க...கிளம்புங்க....மணி ஆயிடுச்சு...வா குட்டிமா....கிளம்புவோம் என்று
அழைக்கும் போது...அப்பாவின் கைப்பேசி அழைக்கிறது...
நடந்த இந்த அமளியில் கைப்பேசியை கவனிக்காத அப்பா...அதில் பார்த்தால் அத்தனை கால்கள் குவிந்துள்ளது.... இப்போ அழைத்தது......அப்பாவின்......
(தொடரும்)