Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, November 17, 2009

குட்டீஸ்..(6)






குட்டீஸ்...(6)
அங்கே....பார்த்தால்...

சந்தோஷினியை நோக்கி ஒரு பார்பிஃ (barbie) பொம்மை பாட்டு பாடிக்கொண்டே நகர்ந்து வந்தது...
அங்கே... பொம்மைகள் பல விதத்தில் தொடர்வண்டியில் நகர்வதை பார்த்தாள்....



மிஸ் சந்தோஷினியின் கையில் ஒரு கயிறு இழுக்கும் பொம்மையை உள்ள கயிற்றை கொடுத்து இழு என்றாங்க...சந்தோஷினிக்கு அங்கு உள்ள அனைத்துமே புதுசாக இருந்தது...அம்மாவை பார்த்தாள்...லதாம்மா...இழு குட்டிமா..என்றாள்.

சட்டத்தில் மணிகள் வரிசையாக உள்ளதை வண்ணமயமாக இருக்கவும்..குட்டிமா..அதை தொட்டு பார்த்தாள்..பின்பு...லதாம்மா நாளைக்கு வருவோமா...என்று குட்டிமாட்ட கேட்டாள்..
ம்..ம்ம்... என்று மழலைக்கே உரித்தான அழகாக தலையை ஆட்டினாள்...
அவளுக்கு தெரியாது நாளை அம்மா வரமாட்டாங்க என்பது.

மிஸ்...இதுவெல்லாம் உள்ளே விளையாட வைப்பது(indoor games)...அங்க வெளியில விளையாட வைப்பாங்க (outdoor games) ground இருக்கு..பாருங்க...
.
அங்க பார்த்தால் ஊஞ்சல்;ராட்டினம்;சறுக்குமரம்(see-saw;slide; swing; merrygo round;) எல்லாம் இருந்தது...
அப்பா அங்கே இருந்தாங்க..அம்மாவும் அப்பாவுக்கும் ஒரு த்ருப்தி குட்டிமாவை ஸ்கூல் சேர்த்து விட்டதால்...
அவர்கள் அறியவில்லை இவையெல்லாம் சில நேரம் மட்டுமே உபயோகிக்கப்படும்...வரிசையாக வகுப்பறையில் உட்கார வைத்து மனப்பாடம் என்கிற பாடம் என்பதே இப்போது உள்ள கல்வி முறை ஆகிவிட்டது...

மிஸ்..வேற ஒரு மிஸ் சொல்லி தருவாங்க..உங்க பாப்பாவுக்கு..சாப்பிட snacks மற்றும் தண்ணீர் மட்டும் கொடுங்க...அப்பறம் சொல்லுவாங்க...என்று அந்த பள்ளியின் வழக்கத்தை கூறினாங்க...
சிரித்து கொண்டே..விடைபெற்றாள்..சந்தோஷினி....மிஸ்...பார்த்து கொண்டே அடுத்த பெற்றோரிடம் சென்று விட்டாங்க...
இப்போ சந்தோஷினி தன் வசமில்லை வேடிக்கை பார்த்து கொண்டே...அம்மாவின் சேலையை பிடித்து கொண்டு நடந்தாள்.

அருண் மற்றும் லதா அப்படியே விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தனர்.
அப்பாவிற்கு அலுவலகத்து போகும் நேரம் என்பதால்..அவசரமாக விடைபெற்று சென்றார்..
பின் சந்தோஷினியை தூக்கிக்கொண்டு லதாவும் பக்கத்தில் இருந்ததால் நடந்தே சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டி தாத்தாவிடம் தொலைப்பேசியில் பேசினாங்க...
ஸ்கூல் சேர்ந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்..லதா..குடும்பத்தாரிடம்..
குட்டிமா... அப்பா வந்தவுடன் புது டிரஸ் பஃக் வாட்டர் பாட்டில் எல்லாம் வாங்க போலாமா...என்றே சந்தோஷினியிடம் பேசிக்கொண்டே வேலையை பார்த்தாள்.

அப்பா அருண் அங்கே ஸ்கூல் சென்றதால் தாமதம் ஆனதை மேல் அதிகாரியிடம் விளக்கி விட்டு தன் சீட்டில் நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தார்..

மறுநாள் காலை...
(தொடரும்...)

No comments:

Post a Comment