Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Thursday, November 5, 2009

கண்ணீரும் மழைநீரும்


பாரபட்சத்தை முதல்
முறையாக உணர்ந்தவள்
பாரினில் இப்படியும்
நடப்பதை அறியாதவள்
மனவலிமை இன்றி
அழுது கொண்டிருந்தாள்
அன்னாந்து இறைவனை
கேட்டு கொண்டிருந்தாள்
மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்
கண்ணீரின் நீருற்று
அந்த மழையின்
நீருடன் கலந்து
மண்ணில் சேர்ந்தது
தெளிவடைந்தது போல
யதார்த்தமாக எல்லாவற்றையும்
ஏற்று தானே ஆகவேண்டும்....
என மனதிலே நினைத்து
கொண்டே சென்றாள்......

2 comments:

  1. கண்ணீரும் மழை நீரும்

    ரொம்ப நல்லா இருக்கு... நான் கூட உங்க எழுத்து மழையில் நனைந்தேன் சரண்யா...

    அதுவும் இந்த வரிகள் என்னை ஓஹோ சொல்ல வைத்தது :

    "கண்ணீரால் கண்கள்
    நனைந்து கொண்டிருந்தன
    மழைத்துளி அவள்
    கண்ணீர்துளி மேல்
    விழுந்தது ஆறுதலாக
    இறைவன் அவளை
    தேற்றுவதாக உணர்ந்தாள்"

    வாழ்த்துக்கள் ச‌ர‌ண்யா....

    ReplyDelete
  2. நன்றிகள்...திரு கோபி அவர்களே..

    ReplyDelete