Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, October 14, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[3]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்

துன்பம் வரும் போது துவளாமலும்
இன்பத்தில் இன்புற்று துள்ளாமலும்
சமமாக எண்ணி வாழும் மனிதத்திலும்
இறைமை துணை புரிவதாக
இச்சுழற்சி வைத்தானோ...

தேவ தூதர்களாய்....நாம் மாறினால்
மனிதனிடம் எத்துணை ஆசைகள்
மலைத்தே நிற்போம் சற்று
நேரத்திற்கு ஓர் ஆசை
நிமிடத்திற்கு ஓர் ஆசை
நொடிக்கு ஓர் ஆசை என
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரமோ மனம்
விருப்பியதை தகுதி மீறி
அடைவதற்குள் அடுத்த ஆசை....
என்று தான் இதற்கு எல்லையுண்டோ
அன்று தான் நமக்கு ஓய்வுண்டு....

புரியல்லையோ....கணக்கு
புரிந்தாலும் அறிவதென்பது
கடினம் தான் ஏனென்றால்
கடவுள் போட்டு வைத்தது

இனிமையாக மாறிடுமே
இன்னல்கள் தீர்ந்திடுமே
இகழ்ச்சிகளை தவிர்திடனுமே
இன்பமாக வாழ்திடலாமே

குற்றமும் சொல்வாரே காண்...!
ஆற்றலும் வேண்டுமே அதை ஏற்க
ஏற்றமும் பெற வழியும் சொல்லுவார்
மற்றவரும் வஞ்சபுகழ்ச்சியில் வென்றிடுவார்
குற்றமற்றவரும் தன் நிலையை காட்டிடுவார்
வாழ்திடுவார் உலகம் போற்றும் மனிதராவார்

No comments:

Post a Comment