Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, June 13, 2020

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் (Chapter 4)


இந்த புத்தகம் நான்காவது Chapter ஐ தான் பார்க்க போறோம்! வாங்க!


ஆமாம் ல....எதற்குமே கோபப்படக்கூடாதா? அப்படியல்ல ஞாயமானவற்றிற்கு கோபம் வர தான் செய்யும்...அதனை கையாளும் விதம் தான் முக்கியம்....நம்மை பாதிக்காதவாறு நாம் சரியான நிலையில் இருக்கிறோமா என நாம் தூங்கும் முன்பு நாம் நம்மை முதலில் கேள்வி கேடகணும்...சுய பரிசோதனை பண்ணும் போது இன்னும் ஆழமாக நாம் நம்மை உணர உதவுகிறது...சரமாரியாக பல கேள்விகள்..இப்படியும் நபர்கள் இருப்பார்களா? என வியக்க வைக்கிறது அக்கேள்விகள்???🤔

மூன்று முக்கிய கேள்விகள்....
  • இந்த கோபம் தேவைதானா?
  • காரணம் சரியா?
  • ஏதாவது மாறுமா கோபம்படுவதால் ...ப்ரச்சனை தீர்ந்திடுமா?
என்பதை கேட்டுக் கொண்டு தெளிவு பெறுவோம்!
குழந்தைகளை பாதிக்காதவாறு நம்முடைய வாழ்வியல் 
இருக்க வேண்டும்...
அவர்களின் நலன் கருதி செய்ய வேண்டிய முக்கியமானது...
என்னை போலவே அவனுக்கும்/அவளுக்கும் 
கோபம் பொத்துகிட்டு/மூக்குக்குமேல வருது 
என பெருமை கொள்ள வேண்டிய விஷயம் 
கோபம் என்பதல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும்...

அவர்களை நாம் மிகவும் கவனமாக
 கையாள வேண்டும்...
நாம் செய்வதை அவர்கள் கவனிப்பார்கள்..
நம்ம வீட்டு CCTV camera நம்மை கவனிக்கும் 
நம் பிள்ளைகள் தான் என்பதை
 நாம் உணர்ந்தாலே 
பாதி விஷயம் மாறிடும்..
அவர்களுக்கு எதிலாவது கோபம் இருக்கா 
என்பதை அறிந்து அதனை 
முதலில் சரி செய்ய வேண்டும்....👍🙂

எல்லாவற்றிலும் சரி எது?தவறு எது என அவர்கள் அறிவார்கள் ஆனால் சில நுணக்கங்களை அவர்களுக்கு அப்பப்போ நாம் அவர்களுக்கு கேள்வி கேட்டு கொண்டிருக்கும் அவர்களின் விடைகளின் வினோதங்களை உணர வைக்க வேண்டும்....
நம்மை சுற்றி இருப்பவரிடம், 
நாம் அன்றாடாம் சந்திக்கும் நபரிடம்,
 நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு அவர்களின் வாழ்வியலை சொல்லித் தர வேண்டும்...
முடிந்தால் நேரிலும் காட்டலாம்...
நிச்சயம் நியாமானதை உணர முடியும்....
எதற்கு கோபத்தை நியாயம் என்கிறோம் என்பதும் புரியும்...
சும்மாவே கோபம் வரும் அதில் எந்த அர்த்தமும் இருக்காது ...
உடம்பு தான் பாதிக்கும்...யோசிப்போம்..

அழகான படம்....
கோபத்தை வெளியில கொட்டுறவங்க சிறப்பு..
உள்ளே சிறிய ஒரு விஷயமாக இருக்கும்.... 
தெரியாவது செய்யும்..
ஆனால் வெளியில் காட்டாம கோபத்தை உள்ளே  வைத்திருப்பாங்களே அவுங்ககிட்ட தான் 
மிகவும் கவனமாக கையாளணும்...👍
                                                                   - தொடர்ந்து வாசிப்போம்









No comments:

Post a Comment